ETV Bharat / state

யானையை பிடிக்க அதி தீவிர முயற்சி! கும்கிகள் வெல்லுமா? - யானையை பிடிக்க அதி தீவிர முயற்சி

கிருஷ்ணகிரி: ஓசூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டுயானைகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

யானையை பிடிக்க அதி தீவிர முயற்சி
author img

By

Published : Aug 24, 2019, 6:48 AM IST

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் சுற்றித் திரிந்து கிராம மக்களை அச்சுறுத்தி வந்த இரண்டு காட்டு யானைகளை, தற்போது பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகளைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்ட நிலையில், யானைகளைப் பிடிப்பதற்கு உண்டான சாதகமான சூழல் இதுவரை வனத்துறையினருக்குக் கிடைக்கவில்லை. இதனால் காட்டு யானைகளைப் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், பேரண்டப்பள்ளி வடபகுதியில் முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, இன்று காலை வனத்துறையினர் தயாராகினர். இதற்காக வனத்துறை அலுவலர்களின் தலைமையில் மாவட்டம் முழுவதிலிருந்தும், 60க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும் பேரண்டப்பள்ளி வனத்துறை அலுவலகத்தில் குவிந்தனர்.

யானையை பிடிக்க அதி தீவிர முயற்சி

பின்னர் அங்கிருந்து இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டுள்ள பேரண்டப்பள்ளி வனப் பகுதிக்குச் சென்றனர். அங்குக் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து அறிந்த பின்னர் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டத்தை மேற்கொள்ள உள்ளனர், இதற்காக இரண்டு கும்கி யானைகளும் தயாராகி வருகிறது.

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் சுற்றித் திரிந்து கிராம மக்களை அச்சுறுத்தி வந்த இரண்டு காட்டு யானைகளை, தற்போது பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகளைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்ட நிலையில், யானைகளைப் பிடிப்பதற்கு உண்டான சாதகமான சூழல் இதுவரை வனத்துறையினருக்குக் கிடைக்கவில்லை. இதனால் காட்டு யானைகளைப் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், பேரண்டப்பள்ளி வடபகுதியில் முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, இன்று காலை வனத்துறையினர் தயாராகினர். இதற்காக வனத்துறை அலுவலர்களின் தலைமையில் மாவட்டம் முழுவதிலிருந்தும், 60க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும் பேரண்டப்பள்ளி வனத்துறை அலுவலகத்தில் குவிந்தனர்.

யானையை பிடிக்க அதி தீவிர முயற்சி

பின்னர் அங்கிருந்து இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டுள்ள பேரண்டப்பள்ளி வனப் பகுதிக்குச் சென்றனர். அங்குக் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து அறிந்த பின்னர் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டத்தை மேற்கொள்ள உள்ளனர், இதற்காக இரண்டு கும்கி யானைகளும் தயாராகி வருகிறது.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டுயானைகளை பிடிக்க தயாராகும் வனத்துறையினர்
Body:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்று கரையோரத்தில் சுற்றி திரிந்து கிராம மக்களை அச்சுறுத்தி வந்த இரண்டு காட்டு யானைகள் தற்போது பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகளை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்ட நிலையில் யானைகளை பிடிப்பதற்கு உண்டான சாதகமான சூழல் இதுவரை வனத்துறையினருக்கு கிடைக்கவில்லை இதனால் காட்டு யானைகளை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது
இந்த நிலையில் பேரண்டப்பள்ளி வடபகுதியில் முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க இன்று காலை வனத்துறையினர் தயாராகினர். இதற்காக வனத்துறை அதிகாரிகளின் தலைமையில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 60க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காலையில் பேரண்டப்பள்ளி வனத்துறை அலுவலகத்தில் குவிந்தனர்
பின்னர் அங்கிருந்து இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டுள்ள பேரண்டப்பள்ளி வனப் பகுதிக்கு சென்றனர் அங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து அறிந்த பின்னர் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டத்தை மேற்கொள்ள உள்ளனர், இதற்காக இரண்டு கும்கி யானைகளும் தயாராகிவருகிறது இன்று காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் திட்டத்தை முடிப்பதற்கு முழுவீச்சில் வனத்துறையினர் தயாராயினர்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.