ETV Bharat / state

உயர் கோபுர மின்விளக்கு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் சுற்றுலாத்தலங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

author img

By

Published : Nov 20, 2019, 11:01 PM IST

உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் ஆய்வு


கிருஷ்ணகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் இதுகுறித்து கூறும்போது, 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் படி, சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ரூ. 7.55 கோடி மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக' அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் உமாசங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மின்மாற்றியில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி.!!


கிருஷ்ணகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் இதுகுறித்து கூறும்போது, 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் படி, சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ரூ. 7.55 கோடி மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக' அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் உமாசங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மின்மாற்றியில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி.!!

Intro:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பாக கிருஷ்ணகிரி அணைகட்டு பூங்கா, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, கெலவரப்பள்ளி அணைகட்டு பூங்கா, பாம்பாறு அணைகட்டு பூங்கா, உள்ளிட்ட 92- இடங்களில்
ரூ.7.55 கோடி மதிப்பில் உயர் மின்கோபுரம் விளக்கு அமைக்கும் பணி.Body:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பாக கிருஷ்ணகிரி அணைகட்டு பூங்கா, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, கெலவரப்பள்ளி அணைகட்டு பூங்கா, பாம்பாறு அணைகட்டு பூங்கா, உள்ளிட்ட 92- இடங்களில்
ரூ.7.55 கோடி மதிப்பில் உயர் மின்கோபுரம் விளக்கு அமைக்கும் பணி.


கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி பூங்கா பகுதிகளில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பாக உயர் மின்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்றுசெய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..
பின்பு மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கும் போது: தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்களான கிருஷ்ணகிரி அணைகட்டு பூங்கா, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, கெலவரப்பள்ளி அணைகட்டு பூங்கா, பாம்பாறு அணைகட்டு பூங்கா, ஸ்ரீபாஷ்வா பத்மாவதி கோவில் ஒரப்பம், அய்யூர் இயற்கை சூழல் பூங்கா, தளி பூங்கா(ம) படகு, குழாம் தேவர் பெட்டாமலைக் கோவில், சந்திரசூடேஸ்வரர் கோவில், இராஜாஜி நினைவு இல்லம் தொரப்பள்ளி
ஆகிய இடங்களில் ஆற்றல் மிகு தெரு மின் விளக்குகள், உயர்மின் விளக்குகள் 92 இடங்களிலும் மற்றும் முக்கிய பிரதான சாலைகளான தேசிய, மாநில, ஊரக நெடுஞ்சாலைகளில் ஒளிரும் வழிகாட்டி மற்றும்
பெயர் பலகைகள் அமைத்திடவும் ஓட்டல் தமிழ்நாடு கிருஷ்ணகிரி, ஓட்டல் தமிழ்நாடு ஓசூர் ஆகிய இடங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்காகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து
நிலையம், ஓட்டல் தமிழ்நாடு கிருஷ்ணகிரி, ஓட்டல் தமிழ்நாடு ஓசூர் ஆகிய இடங்களுக்கு மாவட்ட சுற்றுலா தகவல் வரைபட பலகை நிறுவிடவும் ரூ.7.55 கோடி மதிப்பீட்டில் தற்பொழுது பணிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் தமிழக சுற்றுலாத்துறை சார்பாகவும் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தெரிந்துகொள்ளும் வகையில் ஒளிரும் போர்டு அமைக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் திரு.உமாசங்கர், செய்தி மக்கள் தொடர்புஅலுவலர் திரு.மு.சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.