ETV Bharat / state

கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட தம்பதி; சிக்கியது கடிதம்!

author img

By

Published : Sep 26, 2019, 8:27 AM IST

கிருஷ்ணகிரி: செல்லாண்டி நகரைச் சேர்ந்த ஒரு தம்பதி அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியிருந்த நிலையில் அதனை அடைக்க முடியாததால் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் செல்லாண்டி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (38) லாரி ஓட்டுநர். இவரது மனைவி ஜெரினா (28). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துவந்த நிலையில் தற்போது ஜெரினா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.

கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலை
கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலை

இந்நிலையில், நேற்றிரவு கணவன், மனைவி இருவரும் இரவு வீட்டில் தூங்கியுள்ளனர். மறுநாள் காலை வெகு நேரமாகியும் ஜெரினாவின் வீட்டின் கதவு திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டில் இருவரும் தூக்கில் பிணமாகத் தொங்கியது தெரியவந்தது.

இது குறித்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர். உயிரிழந்த தம்பதியினரின் உடலை மீட்டு உடற்குறைவுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஞ

பின்னர், காவல் துறையினரிடம் சிக்கிய கடிதத்தில், நாங்கள் அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கியுள்ளோம். அதனை எங்களால் திருப்பிக்கட்ட முடியவில்லை. இதனால் நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம் என எழுதியிருந்தது. இது குறித்து, வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் வீசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க : கேரளாவில் மாடியிலிருந்து குதித்து மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம் செல்லாண்டி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (38) லாரி ஓட்டுநர். இவரது மனைவி ஜெரினா (28). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துவந்த நிலையில் தற்போது ஜெரினா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.

கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலை
கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலை

இந்நிலையில், நேற்றிரவு கணவன், மனைவி இருவரும் இரவு வீட்டில் தூங்கியுள்ளனர். மறுநாள் காலை வெகு நேரமாகியும் ஜெரினாவின் வீட்டின் கதவு திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டில் இருவரும் தூக்கில் பிணமாகத் தொங்கியது தெரியவந்தது.

இது குறித்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர். உயிரிழந்த தம்பதியினரின் உடலை மீட்டு உடற்குறைவுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஞ

பின்னர், காவல் துறையினரிடம் சிக்கிய கடிதத்தில், நாங்கள் அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கியுள்ளோம். அதனை எங்களால் திருப்பிக்கட்ட முடியவில்லை. இதனால் நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம் என எழுதியிருந்தது. இது குறித்து, வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் வீசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க : கேரளாவில் மாடியிலிருந்து குதித்து மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை!

Intro:கிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால்
கணவன் மனைவி தற்கொலை
கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கினர்.Body:கிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால்
கணவன் மனைவி தற்கொலை
கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கினர்.

கிருஷ்ணகிரி செல் லாண்டி நகர் பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது38). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெரினா (28). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகியுள்ள நிலையில் குழந்தை இல்லை. தற்போது ஜெரினா 3 மாதம் நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்.
நேற்றிரவு கணவன்& மனைவி இருவரும் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினர். இன்று காலை வெகு நேரமாகியும் ஜெரினாவின் வீட்டின் கதவு திறக்கவில்லை.
இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது வீட்டில் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.
உடனே அவர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது கண வன்&மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய 2 பேரையும் கீழே இறக்கினர்.
அப்போதுஅந்த தம்பதி யினர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசார் கையில் சிக்கியது. அந்த கடிதத்தில் ஜெரினா எழுதி இருப்பதாவது நாங்கள் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியுள்ளோம்.
அந்த கடனை எங்களால் திருப்பி கட்ட முடியவில்லை. இதனால் நாங்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை.
அதற்கு உறவினர்கள் யாராவது எங்கள் வீட்டில் உள்ள பொருட்களை அடகு வைத்து கடன்களை அடைக்குமாறு தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெரினா எழுதி இருந்தார்.
பின்னர் தம்பதியினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் கணவன்&மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.