ETV Bharat / state

போக்குவரத்து காவலர் லாரி மோதி  மரணம்! - போக்குவரத்து காவலர் லாரி மோதி பரிதாப மரணம்

கிருஷ்ணகிரி: ஓசூர் ஜுஜுவடியில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

police death
police death
author img

By

Published : May 8, 2020, 12:02 AM IST

கர்நாடகா - தமிழ்நாடு மாநில எல்லையான ஓசூர் ஜுஜுவடி சோதனைச் சாவடியில் காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய்த்துறை என மூன்று துறையினரும் இரவு பகலாக சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு (மே.6) ஓசூர் - பெங்களூர் சாலையில் பணியில் ஈட்டுப்பட்டிருந்த போக்குவரத்து காவலர் சேட்டு, வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது, பெங்களூர் நோக்கி வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கண்டெய்னர் லாரி ஒன்று, அங்கிருந்த தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சேட்டு மீது மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் டி.எஸ்.பி சங்கு, இறந்த காவலரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: 8 பேர் கவலைக்கிடம்

கர்நாடகா - தமிழ்நாடு மாநில எல்லையான ஓசூர் ஜுஜுவடி சோதனைச் சாவடியில் காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய்த்துறை என மூன்று துறையினரும் இரவு பகலாக சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு (மே.6) ஓசூர் - பெங்களூர் சாலையில் பணியில் ஈட்டுப்பட்டிருந்த போக்குவரத்து காவலர் சேட்டு, வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது, பெங்களூர் நோக்கி வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கண்டெய்னர் லாரி ஒன்று, அங்கிருந்த தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சேட்டு மீது மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் டி.எஸ்.பி சங்கு, இறந்த காவலரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: 8 பேர் கவலைக்கிடம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.