ETV Bharat / state

'மேலே வந்தால் நானும் கீழே குதிப்பேன்' - போதையில் 100 அடி டவரில் ஏறி சேட்டை செய்த முதியவர்!

author img

By

Published : Jan 20, 2020, 8:13 AM IST

கிருஷ்ணகிரி : 100 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறிய 60 வயது முதியவர், போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் சுமார் 3 மணி நேரம் போக்குக் காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

suicide attempt
suicide attempt

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி பூசாரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (60). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினந்தோறும் மது போதையில் சாலையில் உள்ள பேருந்துகளை வழி மறித்து கலாட்டா செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், ஜனவரி 19ஆம் தேதி மாலை 3 மணியளவில் அரசம்பட்டியில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்துவிட்டு போதையில் மதுபானக் கடைக்கு எதிரே உள்ள 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவரில் ஏறியுள்ளார்.

இதனைக் கவனித்த அப்பகுதி மக்கள் அவரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர். இளைஞர்கள் பலர் டவர் மீது ஏற முயற்சித்தபோது மேலே ஏறி வந்தால் கீழே குதித்து விடுவதாக அந்த போதை ஆசாமி கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த மக்கள் உடனடியாக பாரூர் காவல் நிலையத்திற்கும், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாரூர் காவல் ஆய்வாளர் கபிலன், டவரில் இருக்கும் முதியவரை சமாதானப்படுத்தி பேசியவாறே டவர் மீது ஏறினார்.

'குரூப்-1 தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்'

ஆனால், அந்த முதியவர், காவலர்கள் மேலே வந்தால் குதித்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பாதி தூரம் வரை சென்ற காவல் ஆய்வாளர் கபிலன் கீழே இறங்கினார். என்ன செய்வதென்று தெரியாது தவித்த காவல் துறையினர், டவரில் ஏறியிருப்பவரின், நண்பரை டவரில் ஏற வைத்தும், அவருக்கு மதுபாட்டில் கொண்டு வருவதாகக் கூறியும் சாமர்த்தியமாகப் பேசி தீயணைப்புத்துறையின் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

முதியவரைக் காப்பாற்றிய தீயணைப்புத்துறை

இதன் பின்னர், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை தருமபுரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சுமார் மூன்று மணி நேரம் போக்குக் காட்டிய போதை ஆசாமியால் அரசம்பட்டியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி பூசாரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (60). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினந்தோறும் மது போதையில் சாலையில் உள்ள பேருந்துகளை வழி மறித்து கலாட்டா செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், ஜனவரி 19ஆம் தேதி மாலை 3 மணியளவில் அரசம்பட்டியில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்துவிட்டு போதையில் மதுபானக் கடைக்கு எதிரே உள்ள 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவரில் ஏறியுள்ளார்.

இதனைக் கவனித்த அப்பகுதி மக்கள் அவரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர். இளைஞர்கள் பலர் டவர் மீது ஏற முயற்சித்தபோது மேலே ஏறி வந்தால் கீழே குதித்து விடுவதாக அந்த போதை ஆசாமி கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த மக்கள் உடனடியாக பாரூர் காவல் நிலையத்திற்கும், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாரூர் காவல் ஆய்வாளர் கபிலன், டவரில் இருக்கும் முதியவரை சமாதானப்படுத்தி பேசியவாறே டவர் மீது ஏறினார்.

'குரூப்-1 தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்'

ஆனால், அந்த முதியவர், காவலர்கள் மேலே வந்தால் குதித்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பாதி தூரம் வரை சென்ற காவல் ஆய்வாளர் கபிலன் கீழே இறங்கினார். என்ன செய்வதென்று தெரியாது தவித்த காவல் துறையினர், டவரில் ஏறியிருப்பவரின், நண்பரை டவரில் ஏற வைத்தும், அவருக்கு மதுபாட்டில் கொண்டு வருவதாகக் கூறியும் சாமர்த்தியமாகப் பேசி தீயணைப்புத்துறையின் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

முதியவரைக் காப்பாற்றிய தீயணைப்புத்துறை

இதன் பின்னர், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை தருமபுரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சுமார் மூன்று மணி நேரம் போக்குக் காட்டிய போதை ஆசாமியால் அரசம்பட்டியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Intro:100 உயரமுள்ள செல்போன் டவரில் ஏரிய 60 வயது முதியவர் – போதையில் சுமார் 3 மணி நேரம் போக்கு காட்டியதால் பரபரப்புBody:100 உயரமுள்ள செல்போன் டவரில் ஏரிய 60 வயது முதியவர் – போதையில் சுமார் 3 மணி நேரம் போக்கு காட்டியதால் பரபரப்பு

போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி பூசாரி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சேகர் (60). இவர் மதுவிற்கு அடிமையாகி தினமும் மதுபோதையில் சாலையில் உள்ள பேருந்துகளை வழிமறித்து கலாட்டா செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் அரசம்பட்டியில் உள்ள மதுபானக்கடையில் மது அறுந்துவிட்டு மது போதையில் மதுபானக்கடைக்கு எதிரே உள்ள 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் மீது ஏறியுள்ளார். இதனை கவனித்த பொது மக்கள் அவரை கீழே வரும்படி கூறியுள்ளனர். இளைஞர்கள் பலர் டவர் மீது ஏற முயற்சித்தபோது மேலே ஏறி வந்தால் கீழே குதித்துவிடுவதாக கூறியுள்ளார். இதனால் இளைஞர்கள் டவர் மீது ஏறாமல் பாரூர் காவல் நிலையத்திற்கும், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். பாரூர் காவல் ஆய்வாளர் கபிலன் நிகழ்விடத்திற்கு வந்து முதியவரை சமாதானப்படுத்தி பேசியவாறு டவர் மீது ஏறியுள்ளார். அப்போது முதியவர் மீண்டும் உயரே ஏறியவாறு இருந்ததோடு மட்டுமில்லாமல், போலீஸ் மேலே வந்தால் கீழே குதித்து விடுவதாக மிரட்டியுள்ளார். பாதி தூரம் வரை சென்ற காவல் ஆய்வாளர் கபிலன் மீண்டும் திரும்பிவிட்டார். இதற்குள்ளாக டவர் மீது ஏறிய சம்பவம் அருகே உள்ள கிராமம் முழுவதும் பரவியதையடுத்து அங்கு கூட்டம் அதிகமாக கூடத்துவங்கியது.

டவர் உச்சத்திற்கு சென்ற சேகர் பாக்கெட்டில் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து குடித்துவிட்டு பின்னர் தான் கட்டியிருந்த வேட்டியை கழட்டி பொது மக்கள் மீது வீசியுள்ளார். என்ன செய்வது என யோசித்த காவல் துறையினர், சேகரின் நண்பர் ஒருவரை வைத்து மேலே ஏறச்சொல்லியுள்ளனர். அவரையும் டவர் மீது ஏறக்கூடாது என மிரட்டிய சேகர், உன்னை காப்பாற்ற வரவில்லை எனவும் உனக்கு மீண்டும் மது பாட்டில் வாங்கி வைத்திருப்பதாக கூறி மது பாட்டிலை காட்டியவாறு மேலே ஏறியுள்ளார். அதற்கு சம்மதித்து அவரை மேலே வரவழைத்துள்ளார். அவரிடன் சென்ற நண்பர் அவரிடம் மது பாட்டிலை கொடுத்துவிட்டு அவரை அங்கேயே இருக்கமாக கட்டி பிடித்துக்கொண்டார். இதனையடுத்து டவர் மீது வேகமாக ஏறிய தீயணைப்பு வீரர்கள் அவரை பிடித்து கை மற்றும் கால்களை கயிற்றால் கட்டி ஒரு தீயணைப்பு வீரரின் தோள் மீது அமர வைத்து அவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன் வரவழைக்கப்பட்டு அவரை தருமபுரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சுமார் 3 மணி நேரம் போக்கு காட்டிய போதை ஆசாமியால் அரசம்பட்டியில் பரபரப்பாக காணப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.