ETV Bharat / state

கரூரில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? - மாவட்ட ஆட்சியர் பதில்

author img

By

Published : Jul 29, 2020, 8:46 AM IST

கரூர்: மற்ற மாவட்டங்களை விட கரூரில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்தார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கரோனாவால் பாதிக்கப்பட்ட 135 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரூரை பொறுத்தவரை சராசரி 10 முதல் 15 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டு வருகிறது. வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து வருபவர்கள் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர், உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரத்தை கண்காணிக்க ஒரு குழு அமைத்துள்ளார்.

உணவின் தரம், சுவை, உரிய நேரம் ஆகியவற்றை இக்குழு கண்காணித்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து அரசு தான் முடிவெடுக்கும். தற்போது, தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை மட்டும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: உலக புலிகள் தினம்: காடுகளின் வனக்காவலனை பாதுகாப்போம்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கரோனாவால் பாதிக்கப்பட்ட 135 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரூரை பொறுத்தவரை சராசரி 10 முதல் 15 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டு வருகிறது. வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து வருபவர்கள் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர், உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரத்தை கண்காணிக்க ஒரு குழு அமைத்துள்ளார்.

உணவின் தரம், சுவை, உரிய நேரம் ஆகியவற்றை இக்குழு கண்காணித்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து அரசு தான் முடிவெடுக்கும். தற்போது, தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை மட்டும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: உலக புலிகள் தினம்: காடுகளின் வனக்காவலனை பாதுகாப்போம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.