ETV Bharat / state

நடுவழியில் கழன்று ஓடிய பேருந்தின் டயர் - சாமர்த்தியமாகச் செயல்பட்ட ஓட்டுநர்!

author img

By

Published : Jan 21, 2020, 8:14 AM IST

கரூர்: நடுவழியில் ஆம்னி பேருந்தின் டயர் கழன்று ஓடிய நிலையில், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

car accident
car accident

கரூர் மாவட்டம் பண்டுதகாரன்புதூர் பகுதியில் சேலம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தின் முன் பக்க சக்கரம் கரகாட்டக்காரன் திரைப்பட பாணியில் கழன்று ஓடியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக சாமர்த்தியமாகச் செயல்பட்டு, பேருந்தை நிறுத்தினார். ஓட்டுநரின் இந்த சாமர்த்தியத்தால் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடிய டயர், அப்பகுதியில் உள்ள நியாய விலை கடையில் மோதி சுற்றுச்சுவர் இடிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை காவல் துறையினர், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

டயர் கழன்று ஓடிய பேருந்தை பார்வையிட்ட காவல் துறையினர்

மேலும், நியாய விலைக்கடைக்கு விடுமுறை என்பதால் பெரும் விபத்து ஏதும் நிகழவில்லை.

இதையும் படிங்க: தொலைதொடர்புத் துறையை மீட்டெடுக்கும் வழி

கரூர் மாவட்டம் பண்டுதகாரன்புதூர் பகுதியில் சேலம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தின் முன் பக்க சக்கரம் கரகாட்டக்காரன் திரைப்பட பாணியில் கழன்று ஓடியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக சாமர்த்தியமாகச் செயல்பட்டு, பேருந்தை நிறுத்தினார். ஓட்டுநரின் இந்த சாமர்த்தியத்தால் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடிய டயர், அப்பகுதியில் உள்ள நியாய விலை கடையில் மோதி சுற்றுச்சுவர் இடிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை காவல் துறையினர், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

டயர் கழன்று ஓடிய பேருந்தை பார்வையிட்ட காவல் துறையினர்

மேலும், நியாய விலைக்கடைக்கு விடுமுறை என்பதால் பெரும் விபத்து ஏதும் நிகழவில்லை.

இதையும் படிங்க: தொலைதொடர்புத் துறையை மீட்டெடுக்கும் வழி

Intro:தேசிய நெடுஞ்சாலையில் நடுவழியில் ஓடிய டயர் - அதிர்ஷ்டவசமாக போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்த டிரைவர் இதனால் பயணித்த 25 பேர் உயிர் தப்பினர்.Body:கரகாட்டக்காரன் சினிமா பட பாணியில் ஆம்னி பேருந்தின் டயர் கழன்று ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடியது - டயர் அருகில் உள்ள கூட்டுறவு நியாய விலை கடை சுற்றுச் சுவரை உடைத்து வெளியே ஓடியதால் பரபரப்பு – ஆம்னி பேருந்தில் பயணித்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், பண்டுதகாரன்புதூர் பகுதியில் ஆம்னி பேருந்து ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது முன் பக்க சக்கரம் டயர் அப்படியே கழன்று ஓடியது. இதனால் உடனடியாக பேருந்தினை நிறுத்திய டிரைவரால் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் இது குறித்து நெடுஞ்சாலை காவல்துறையினர் மற்றும் வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அனைவரும் மாற்று பேருந்துகளில் மாற்றி அனுப்பப்பட்டனர். மேலும், ஒன்றரை கிலோ மீட்டர் ஓடிய டயர், அதே பகுதியில் உள்ள கூட்டுறவு நியாய விலை கடையில் மோதியதில் சுற்றுச்சுவர் இடிந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதினால், நியாய விலைக்கடையில் யாரும் இல்லை, இருந்திருந்தால் விபத்துகள் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.