சுற்றுச்சூழலியல் போராளியும், காவிரி பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான முகிலன், பாலியல் வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டர்.
இதனையடுத்து முகிலனை சிபிசிஐடி காவல்துறையினர் கஸ்டடியில் விசாரணை செய்யும் வழக்கின் விசாரணை இன்று கரூர் நீதிமன்றத்திற்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி விஜய் கார்த்திக் முன்னிலையில் போராளி முகிலன் சிறைக்காவலர்கள் தன்னை தாக்கியதாக கூறி சட்டையை கழட்டி காண்பித்தார்.
மேலும் சிபிசிஐடி விசாரணை காவலில் செல்வதற்கு முகிலன் மறுத்ததால் வழக்கை நாளை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.