ETV Bharat / state

விஷ வண்டு தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு

author img

By

Published : Jul 29, 2021, 1:31 PM IST

Updated : Jul 29, 2021, 2:04 PM IST

Poisonous beetle bit 100 day workers  கரூர் செய்திகள்  karur news  karur latest news  100 நாள் பணியாளகளை விஷ வண்டு கடித்தது  விஷ வண்டு தாக்கல்  Poisonous beetle bit 100 day workers in karur  கரூரில் 100 நாள் பணியாளகளை விஷ வண்டு கடித்தது  அமராவதி அணை  செட்டிபாளையம் அணை
விஷ வண்டு தாக்கல்

13:24 July 29

கரூர் அருகே அமராவதி அணையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 100 நாள் பணியாளர்களை விஷ வண்டு தாக்கியது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

கரூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் செட்டிபாளையம் அணையில் அமைந்துள்ள பூங்காவை இன்று (ஜூலை 29) சுத்தம் செய்யும் பணி நடைப்பெற்றது.

இதில் ஈடுபட்டிருந்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை, எதிர்பாராத விதமாக விஷ வண்டு தாக்கியது. 70 பேர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இளைஞர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர்.  வயது முதிர்ந்தவர்கள் விஷ வண்டு தாக்குதலுக்கு ஆளாகினர்.  

அவர்களை அவசர ஊர்தி மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி (46), உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த கார்த்தி மாற்றுத்திறனாளி என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் நீடிக்கிறது.

இதையும் படிங்க: கேரளாவில் வார இறுதிநாள்களில் பொதுமுடக்கம்!

13:24 July 29

கரூர் அருகே அமராவதி அணையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 100 நாள் பணியாளர்களை விஷ வண்டு தாக்கியது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

கரூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் செட்டிபாளையம் அணையில் அமைந்துள்ள பூங்காவை இன்று (ஜூலை 29) சுத்தம் செய்யும் பணி நடைப்பெற்றது.

இதில் ஈடுபட்டிருந்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை, எதிர்பாராத விதமாக விஷ வண்டு தாக்கியது. 70 பேர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இளைஞர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர்.  வயது முதிர்ந்தவர்கள் விஷ வண்டு தாக்குதலுக்கு ஆளாகினர்.  

அவர்களை அவசர ஊர்தி மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி (46), உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த கார்த்தி மாற்றுத்திறனாளி என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் நீடிக்கிறது.

இதையும் படிங்க: கேரளாவில் வார இறுதிநாள்களில் பொதுமுடக்கம்!

Last Updated : Jul 29, 2021, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.