ETV Bharat / state

கடையை அடைக்காமல் அலட்சியம் காட்டிய நகைக்கடை - அதிரடி காட்டிய நகராட்சி அலுவலர்கள்

author img

By

Published : Jul 25, 2020, 12:15 PM IST

கரூர்: மாவட்ட நிர்வாகம் அனுமதித்த நேரத்தையும் தாண்டி வியாபாரம் செய்த தங்கநகைக் கடைக்கு கரூர் நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.

closed
closed

கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அம்மாவட்டத்தில் இதுவரை 328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 189 பேர் குணமடைந்துள்ளனர். ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மாலை 6 மணி வரை மட்டுமே அனைத்துக் கடைகளும் செயல்பட வேண்டுமென அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ கணேஷ் தங்கநகைக் கடை ஊழியர்கள் ஆறு மணிக்கு மேலாகியும் கடையைப் பூட்டாமல் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தனர். காவல் துறையினர் ஆறு மணிக்கு முன்பே வீதிகளில் உள்ள கடைகளை மூட எச்சரித்துச் சென்றனர். இருப்பினும், கடை திறந்திருப்பதைக் கண்ட நகராட்சி நிர்வாகம், கடையைப் பூட்டி சீல் வைத்தனர்.

தங்க நகைக்கடைக்கு சீல் வைத்த நகராட்சி அலுவலர்கள்

இதையும் படிங்க:உரிமம் இல்லாமல் செயல்பட்ட 'மூலிகை மைசூர்பா' கடைக்குச் சீல் - உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி

கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அம்மாவட்டத்தில் இதுவரை 328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 189 பேர் குணமடைந்துள்ளனர். ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மாலை 6 மணி வரை மட்டுமே அனைத்துக் கடைகளும் செயல்பட வேண்டுமென அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ கணேஷ் தங்கநகைக் கடை ஊழியர்கள் ஆறு மணிக்கு மேலாகியும் கடையைப் பூட்டாமல் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தனர். காவல் துறையினர் ஆறு மணிக்கு முன்பே வீதிகளில் உள்ள கடைகளை மூட எச்சரித்துச் சென்றனர். இருப்பினும், கடை திறந்திருப்பதைக் கண்ட நகராட்சி நிர்வாகம், கடையைப் பூட்டி சீல் வைத்தனர்.

தங்க நகைக்கடைக்கு சீல் வைத்த நகராட்சி அலுவலர்கள்

இதையும் படிங்க:உரிமம் இல்லாமல் செயல்பட்ட 'மூலிகை மைசூர்பா' கடைக்குச் சீல் - உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.