ETV Bharat / state

குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு தாய் தற்கொலை முயற்சி

author img

By

Published : Oct 12, 2020, 3:10 AM IST

கரூர்: நொய்யல் ஆற்றில் ஒரு வயது குழந்தையை வீசி விட்டு, தனது கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு தாய் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

mother-threw-baby-in-river-and-tried-to-commit-suicide
mother-threw-baby-in-river-and-tried-to-commit-suicide

கோவை ஒண்டிப்புதுரைச் சேர்ந்த தம்பதியர் வீரமணி-சத்யா (22). இவர்களுக்கு விஜி (1) என்ற குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் விஜிக்கு பிறந்தது முதல் பேச்சு வரவில்லை. மருத்துவ பரிசோதனையில் குழந்தை பேசும் திறனை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த சத்யா அக்.10ஆம் தேதி இரவு கரூர் வந்துள்ளார். பின்னர் நொய்யல் ஆற்றில் குழந்தையை வீசி விட்டு தனது கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த சத்யாவை மீட்ட வேலாயுதம்பாளையம் காவல்துறையினர், அவரை கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து நொய்யல் ஆற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடலை, தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பேசிக் கொண்டிருக்கும்போதே பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்ற நபர்?

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

கோவை ஒண்டிப்புதுரைச் சேர்ந்த தம்பதியர் வீரமணி-சத்யா (22). இவர்களுக்கு விஜி (1) என்ற குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் விஜிக்கு பிறந்தது முதல் பேச்சு வரவில்லை. மருத்துவ பரிசோதனையில் குழந்தை பேசும் திறனை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த சத்யா அக்.10ஆம் தேதி இரவு கரூர் வந்துள்ளார். பின்னர் நொய்யல் ஆற்றில் குழந்தையை வீசி விட்டு தனது கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த சத்யாவை மீட்ட வேலாயுதம்பாளையம் காவல்துறையினர், அவரை கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து நொய்யல் ஆற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடலை, தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பேசிக் கொண்டிருக்கும்போதே பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்ற நபர்?

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.