ETV Bharat / state

கிணற்றுக்குள் கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனின் உடல் மீட்பு!

author img

By

Published : Oct 7, 2020, 12:36 PM IST

கரூர்: கல்லுபாளையத்திலுள்ள விவசாய கிணற்றுக்குள் இறந்த நிலையில் மீட்கப்பட்ட 15 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனின் உடல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனின் உடல் மீட்பு
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனின் உடல் மீட்பு

கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கல்லுபாளையத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (32). இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் மணிகண்டன் (15) மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இவர், சிஎஸ்ஐ மனநலம் பாதிக்கப்பட்ட பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், சிறுவனை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று (அக்.07) அதே பதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது விவசாய கிணற்றுக்குள் மணிகண்டன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுவனின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆற்றில் வெட்டி வீசப்பட்ட இளைஞர்: உயிருக்குப் போராடிய நிலையில் காவல் துறையினர் மீட்பு!

கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கல்லுபாளையத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (32). இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் மணிகண்டன் (15) மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இவர், சிஎஸ்ஐ மனநலம் பாதிக்கப்பட்ட பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், சிறுவனை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று (அக்.07) அதே பதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது விவசாய கிணற்றுக்குள் மணிகண்டன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுவனின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆற்றில் வெட்டி வீசப்பட்ட இளைஞர்: உயிருக்குப் போராடிய நிலையில் காவல் துறையினர் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.