ETV Bharat / state

டிஎன்பிஎல் காகித ஆலையில் லிப்ட் அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!

author img

By

Published : Aug 25, 2020, 7:01 PM IST

கரூர்: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் உள்ள லிப்ட்டின், பெல்ட் அறுந்து கீழே விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

TNPL
TNPL

கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் அருகே உள்ள புகழூர் பகுதியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு செம்படாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மகன், தனசேகரன் (43) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஆக.24) மாலை தனசேகரன் ஆலையில் உள்ள லிப்டில் மேலிருந்து கீழே இறங்கும்போது லிப்ட்டின் பெல்ட் அறுந்து கீழே விழுந்தது.

அதில் தனசேகரனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, டிஎன்பிஎல் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்பு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும், அவர் இன்று (ஆக.25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வேலாயுதம் பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் அருகே உள்ள புகழூர் பகுதியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு செம்படாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மகன், தனசேகரன் (43) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஆக.24) மாலை தனசேகரன் ஆலையில் உள்ள லிப்டில் மேலிருந்து கீழே இறங்கும்போது லிப்ட்டின் பெல்ட் அறுந்து கீழே விழுந்தது.

அதில் தனசேகரனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, டிஎன்பிஎல் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்பு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும், அவர் இன்று (ஆக.25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வேலாயுதம் பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.