ETV Bharat / state

3 ஆண்டுவரை நீடிக்கும் குடிநீர் பிரச்னை: கரூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

author img

By

Published : Dec 11, 2019, 10:41 PM IST

கரூர்: கிருஷ்ணராயபுரம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நீங்காமல் இன்னும் நீடித்துவருவதால் தாங்கள் ஏன் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

due to water scarcity will boycott the local body election says karur people
கரூர் மக்கள்

கரூரை அடுத்த கிருஷ்ணாபுரம் தொகுதிக்குள்பட்ட முத்துரங்கம்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காவிரி கூட்டுக் குடிநீரை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்து வந்த நிலையில் இதுவரை கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தவில்லை என்றும் மேலும் இது சம்பந்தமாக பலமுறை துறைச் சார்ந்த அலுவலர்களிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தற்போதுவரை நிலத்தடி நீர் குறைவாக இருப்பதால் சிறிதளவு தண்ணீரே வருவதாகவும் அதுவும் சுமார் ஒரு மணி நேரம் மட்டும் கிடைப்பதாகவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் முத்துரங்கம்பட்டியில் வெறும் நான்கு தண்ணீர் குழாய்கள் மூலம் ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் வீதத்தில் வழங்கப்படுகிறது.

இதனால் தொடர்ந்து நிலவிவரும் குடிநீர் பிரச்னையால் தாங்கள் ஏன் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று அம்மக்கள் கேள்வியை முன்வைத்துள்ளனர். உடனடியாகத் தெருக்கு ஒரு தண்ணீர் குழாய் அமைத்துதந்து குடிநீர் பற்றாக்குறையை போக்கவில்லை என்றால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் மக்களின் பேட்டி

இதையும் படியுங்க: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டும் சுயேச்சைகள்!

கரூரை அடுத்த கிருஷ்ணாபுரம் தொகுதிக்குள்பட்ட முத்துரங்கம்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காவிரி கூட்டுக் குடிநீரை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்து வந்த நிலையில் இதுவரை கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தவில்லை என்றும் மேலும் இது சம்பந்தமாக பலமுறை துறைச் சார்ந்த அலுவலர்களிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தற்போதுவரை நிலத்தடி நீர் குறைவாக இருப்பதால் சிறிதளவு தண்ணீரே வருவதாகவும் அதுவும் சுமார் ஒரு மணி நேரம் மட்டும் கிடைப்பதாகவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் முத்துரங்கம்பட்டியில் வெறும் நான்கு தண்ணீர் குழாய்கள் மூலம் ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் வீதத்தில் வழங்கப்படுகிறது.

இதனால் தொடர்ந்து நிலவிவரும் குடிநீர் பிரச்னையால் தாங்கள் ஏன் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று அம்மக்கள் கேள்வியை முன்வைத்துள்ளனர். உடனடியாகத் தெருக்கு ஒரு தண்ணீர் குழாய் அமைத்துதந்து குடிநீர் பற்றாக்குறையை போக்கவில்லை என்றால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் மக்களின் பேட்டி

இதையும் படியுங்க: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டும் சுயேச்சைகள்!

Intro:காவிரி கூட்டுக்குடிநீர் இல்லாததால் ஊராட்சி மன்றத் தேர்தலை புறக்கணிக்கும் கிராம பொதுமக்கள்.Body:கரூர் கிருஷ்ணராயபுரம் பகுதியில் இருக்கும் முத்துரங்கம்பட்டியில் காவிரி கூட்டுக்குடிநீரை எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்கள் ஒரு குடும்பத்திற்கு 2 குடம் தண்ணி விதத்தில் வழங்கப்படுவதால் ஆவேசமடைந்த மக்கள் வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலை புறக்கணீக்க போவதாக அறிவிப்பு.

கரூர் அடுத்த கிருஷ்ணாபுரம் தொகுதிக்குட்பட்ட முத்துரங்கம்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காவிரி கூட்டுக்குடிநீர் எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் ஆனால் இன்று வரை கூட்டுக் குடிநீர் திட்டம் வரவில்லை இது சம்பந்தமாக பலமுறை அதிகாரிகளிடம் இது குறித்து மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்தற்போது வரை நிலத்தடி நீர் குறைவாக இருப்பதால் சிறிதளவு தண்ணீரை வந்து கொண்டிருப்பதால் அதுவும் சுமார் ஒரு மணி நேரமே வருகிறது. மேலும் பொது இடத்தில் நான்கு பைபிளில் உள்ள நிலையில் ஒரு குடும்பத்திற்கு 2 குடம் தண்ணி விதத்தில் வழங்கப்படுகிறது இதனால் இப்பகுதி உடனே செய்து தர வேண்டும் என்றும் இல்லை ஏன்றால் பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது

பேட்டி – 1. ராகுல் 2.பழனியம்மாள் 3.ஸ்ரீரங்கம்மாள் – முத்துரங்கம்பட்டி ஊர் மக்கள்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.