ETV Bharat / state

குடிபோதையில் தகராறு செய்த தம்பியை கொன்ற அண்ணன்!

கரூர்: மது அருந்த பணம் கேட்டு தாயை மிரட்டி போதையில் தினமும் தகராறு செய்துவந்த தம்பியின் தலைமீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த அண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

author img

By

Published : Jun 5, 2019, 10:52 PM IST

krr

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே ஆத்தூர் சோழி அம்மன் கோவில் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு நந்தகுமார் (21), கௌதமன் (19) என இரண்டு மகன்கள் உள்ளனர். இளையவரான கௌதமன் எப்பொழுதும் மதுவுக்கு அடிமையாக இருந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே கௌதமன் தினம்தோறும் மது போதையில் தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தட்டிக்கேட்ட அவரது தாயை தகாத வார்த்தையில் பேசியும் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அவரது தாய் அண்ணன் நந்தகுமாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார், அதே பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் மது அருந்திவிட்டு போதையில் இருந்த கௌதமனிடம் விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கைகலப்பு தீவரமாகி, அண்ணன் நந்தகுமார் அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து கௌதமனை தலையில் தாக்கினார்.

தம்பியை கொலை செய்த அண்ணன்

இதனால் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது கௌதமன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக வாங்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே ஆத்தூர் சோழி அம்மன் கோவில் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு நந்தகுமார் (21), கௌதமன் (19) என இரண்டு மகன்கள் உள்ளனர். இளையவரான கௌதமன் எப்பொழுதும் மதுவுக்கு அடிமையாக இருந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே கௌதமன் தினம்தோறும் மது போதையில் தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தட்டிக்கேட்ட அவரது தாயை தகாத வார்த்தையில் பேசியும் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அவரது தாய் அண்ணன் நந்தகுமாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார், அதே பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் மது அருந்திவிட்டு போதையில் இருந்த கௌதமனிடம் விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கைகலப்பு தீவரமாகி, அண்ணன் நந்தகுமார் அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து கௌதமனை தலையில் தாக்கினார்.

தம்பியை கொலை செய்த அண்ணன்

இதனால் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது கௌதமன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக வாங்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர்.

Intro:மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட தம்பியை அம்மி கல்லை வைத்து அடித்துக் கொன்ற அண்ணன்


Body:மதுபோதையில் தினம்தோறும் மது அருந்த பணம் கேட்டு அம்மாவை மிரட்டி வந்த தம்பியை கொலை செய்த அண்ணன்.

கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆத்தூர் சோழி அம்மன் கோவில் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் நந்தகுமார் வயது 21 இவரது தம்பி கௌதமன் வயது 19.

கௌதமன் எப்பொழுதும் மதுவுக்கு அடிமையாக இருப்பவன் கடந்த சில நாட்களாக மது போதையில் பணம் கேட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் கடந்த மே முப்பதாம் தேதி மதுபோதையில் அவரது அம்மாவை தகாத வார்த்தையில் பேசி தாக்கியுள்ளார் இதனை அவரது அண்ணன் நந்தகுமாரிடம் தாய் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் அதே பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் மது அருந்திவிட்டு போதையில் உறங்கிக் கொண்டிருந்த கௌதமனை எழுப்பி தட்டி கேட்டுள்ளார் அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது இதில் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் அப்போது அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து கௌதமனை தலையில் தாக்கினார் நந்தகுமார்.

இதனால் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது அவர் ரத்தவெள்ளத்தில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் கௌதமன் முன்னதாகவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வாங்கல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு நந்தகுமாரை கைது செய்தனர் கடுமையான உடன்பிறந்த தம்பியை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ ftp மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

file name:-

TN_KRR_01_05_ALCOHOL_ADDICTION_BROTHER_KILL_TN7205677


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.