ETV Bharat / state

அமராவதியில் தண்ணீர் திறக்கத் தவறினால் போராட்டம் - செந்தில் பாலாஜி

author img

By

Published : Aug 19, 2019, 6:16 PM IST

கரூர்: அமராவதி அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செந்தில் பாலாஜி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மத்திய அரசு அலுவலர்கள் தலைமையில் ஜல் சக்தி அபியான் திட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்பாலாஜி, குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசுகையில், ஒவ்வொரு முறையும் அமராவதி ஆற்றிலிருந்து பாசன நீர் திறக்கப்படும்போது, திருப்பூர் மாவட்டம் வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதனால் அமராவதி ஆற்றை பாசனத்திற்காக நம்பியிருக்கும் கரூர் மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

கரூரில் போராட்டம் - செந்தில் பாலாஜி

தற்போது, அமராவதி அணையில் இரண்டாயிரம் கன அடி நீர் திறந்தால் மட்டுமே கரூர் மாவட்டத்திற்கு பாசனநீர் வந்து சேரும். ஆனால், அரசு தற்போது ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால், இந்த வருடமும் நீர் திருப்பூர் மாவட்டம் வரையிலான தேவைக்கு மட்டுமே பயன்படுகிறது.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஜல் சக்தி அபியான் திட்டம் மூலம் அலுவலர்களிடம் முறையிட்டுள்ளோம். இன்னும் மூன்று அல்லது இரண்டு நாட்களில் இரண்டாயிரம் கன அடி நீர் அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்டவேண்டும். இல்லையெனில், கரூர் மாவட்டத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.



கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மத்திய அரசு அலுவலர்கள் தலைமையில் ஜல் சக்தி அபியான் திட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்பாலாஜி, குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசுகையில், ஒவ்வொரு முறையும் அமராவதி ஆற்றிலிருந்து பாசன நீர் திறக்கப்படும்போது, திருப்பூர் மாவட்டம் வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதனால் அமராவதி ஆற்றை பாசனத்திற்காக நம்பியிருக்கும் கரூர் மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

கரூரில் போராட்டம் - செந்தில் பாலாஜி

தற்போது, அமராவதி அணையில் இரண்டாயிரம் கன அடி நீர் திறந்தால் மட்டுமே கரூர் மாவட்டத்திற்கு பாசனநீர் வந்து சேரும். ஆனால், அரசு தற்போது ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால், இந்த வருடமும் நீர் திருப்பூர் மாவட்டம் வரையிலான தேவைக்கு மட்டுமே பயன்படுகிறது.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஜல் சக்தி அபியான் திட்டம் மூலம் அலுவலர்களிடம் முறையிட்டுள்ளோம். இன்னும் மூன்று அல்லது இரண்டு நாட்களில் இரண்டாயிரம் கன அடி நீர் அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்டவேண்டும். இல்லையெனில், கரூர் மாவட்டத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.



Intro:அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட வில்லை என்றால் கரூரில் மாபெரும் அறப் போராட்டம் நடத்துவோம் அரவக்குறிச்சி மன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி பேட்டி


Body:அமராவதி ஆற்றின் கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் வரை தண்ணீர் வந்து சேரும் வகையில் 2000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் தவறினால் மாபெரும் அறப் போராட்டம் நடத்துவோம் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கரூரில் பேட்டி.

கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஜல் சக்தி அபியான் திட்டம் மத்திய அரசு அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பங்கேற்ற கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர் இக்கூட்டத்தில் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி அமராவதி ஆற்றின் கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு முறையும் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது அது திருப்பூர்மாவட்டம் வரையிலாக பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது இதனால் அமராவதி ஆற்றை நம்பியிருக்கும் கரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் தற்போது அணையின் நீர்மட்டம் போதிய அளவில் உள்ளது இந்த சூழ்நிலையில் 2,000 கன அடி நீர் திறந்தால் மட்டுமே கரூர் மாவட்டத்தை அமராவதி ஆற்று நீர் வந்து சேரும் ஆனால் தற்போது ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளதால் இது திருப்பூர் மாவட்ட வரையிலாக தேவைக்கு மட்டும் ஏற்பதாக இருக்கிறது.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை தற்போது சக்தி அபியான் திட்டம் அதிகாரிகளிடமும் முறையிட்டு உள்ளம் என்னும் மூன்று அல்லது 2 நாட்களில் 2000 கன அடி நீர் அமராவதி அணையில் இருந்து எடுக்கப்பட்ட வேண்டும் அவ்வாறு செய்யவில்லை என்றால் மாபெரும் அறப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.