ETV Bharat / state

கன்டெய்னர் - லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

author img

By

Published : May 14, 2021, 3:36 PM IST

குளித்தலை அருகே கன்டெய்னர் - லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகே கண்டெய்னர் - லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து!!
பெரம்பலூர் அருகே கண்டெய்னர் - லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து!!

கரூர்: பெரம்பலூர் மாவட்டம், அய்யலூர் பகுதியைச் சேர்ந்தவர், முருகராஜ். இவர் சென்னையில் இருந்து கேரளாவிற்கு சரக்கு ஏற்றுவதற்காக கன்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்றார். இந்நிலையில், கன்டெய்னர் லாரி இன்று(மே 14) அதிகாலை மூன்று மணியளவில் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணத்தட்டை அருகே வந்தபோது, எதிரே கரூரிலிருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வந்த, லாரி மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டது. லாரியை சுக்காலியூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டிவந்துள்ளார்.

இந்த விபத்தில் இரு லாரிகளின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதில் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த முருகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி கிளீனர் சண்முகம் மற்றும் லாரி டிரைவர் முருகேசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த குளித்தலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த இருவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: அடுத்தடுத்த நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கடித்த பாம்புகள்!

கரூர்: பெரம்பலூர் மாவட்டம், அய்யலூர் பகுதியைச் சேர்ந்தவர், முருகராஜ். இவர் சென்னையில் இருந்து கேரளாவிற்கு சரக்கு ஏற்றுவதற்காக கன்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்றார். இந்நிலையில், கன்டெய்னர் லாரி இன்று(மே 14) அதிகாலை மூன்று மணியளவில் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணத்தட்டை அருகே வந்தபோது, எதிரே கரூரிலிருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வந்த, லாரி மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டது. லாரியை சுக்காலியூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டிவந்துள்ளார்.

இந்த விபத்தில் இரு லாரிகளின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதில் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த முருகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி கிளீனர் சண்முகம் மற்றும் லாரி டிரைவர் முருகேசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த குளித்தலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இறந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த இருவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: அடுத்தடுத்த நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கடித்த பாம்புகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.