ETV Bharat / state

லாரியை முந்திச் செல்ல முயற்சித்து விபத்து -  3 பேர் கவலைக்கிடம்! - karur latest news

கரூர்: லாலாபேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் லாரியை முந்திச் செல்ல முயற்சித்தபோது விபத்துக்குள்ளாகினர்.

karur
karur
author img

By

Published : Jan 3, 2020, 8:59 AM IST

கரூர் லாலாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மூன்று பேர், வாகனத்தின் முன்னே சென்ற செங்கல் லாரியை கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி இருசக்கர வாகனம் லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர், ஆம்புலன்ஸை தொடர்புகொண்டு அவர்கள் மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து ஏற்பட்ட பகுதி

இது குறித்து லாலாபேட்டை காவல் துறையினர் விசாரிக்கையில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் மகாதானபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: சென்னையில் நடந்த வாகன விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு!

கரூர் லாலாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மூன்று பேர், வாகனத்தின் முன்னே சென்ற செங்கல் லாரியை கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி இருசக்கர வாகனம் லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர், ஆம்புலன்ஸை தொடர்புகொண்டு அவர்கள் மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து ஏற்பட்ட பகுதி

இது குறித்து லாலாபேட்டை காவல் துறையினர் விசாரிக்கையில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் மகாதானபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: சென்னையில் நடந்த வாகன விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு!

Intro:Body:லாரியை முந்த செல்லும்பொழுது லாரியில் மோதி 3 பேருக்கு விபத்து.

கரூர் அருகே லாலாபேட்டை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்ற போது லாரியை ஒவர்டேக் செய்ய முயற்சித்து விபத்து - 3 பேர் கவலைக்கிடம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், லாலாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் அவ்வழியாக மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, செங்கல் லாரியை கடக்க முயன்றனர் அப்போது விபத்திற்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று பேரும் கவலைக்கிடமான நிலையில், அக்கம் பக்கத்தினர், 108 ஆம்புலன்ஸ் தொடர்பு கொண்டு அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்று பேரும் மகாதானபுரம் பகுதியினை சார்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனை லாலாபேட்டை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.