ETV Bharat / state

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் தீவிர விசாரணை!

கன்னியாகுமரி: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author img

By

Published : Jun 29, 2019, 7:53 PM IST

suicide

குமரி மாவட்டம், சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துதாஸ். மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி கீதா, உணவகத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் வெளியூரில் வேலை பார்த்து வரும் நிலையில், இரண்டாவது மகள் அனுதாஸ்(19) மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்து வந்தார்.

வழக்கம் போல், நேற்று பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அனு தாஸ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்த கீதா, மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவலறிந்த நித்திரவிளை காவல் துறையினர், அனுதாஸின் சடலத்தை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனு தாஸ் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து நித்திரவிளை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம், சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துதாஸ். மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி கீதா, உணவகத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் வெளியூரில் வேலை பார்த்து வரும் நிலையில், இரண்டாவது மகள் அனுதாஸ்(19) மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்து வந்தார்.

வழக்கம் போல், நேற்று பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அனு தாஸ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்த கீதா, மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவலறிந்த நித்திரவிளை காவல் துறையினர், அனுதாஸின் சடலத்தை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனு தாஸ் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து நித்திரவிளை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Body:குமரி மாவட்டம், சின்னத்துறை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் 45. மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி கீதா 36. நித்திரவிளையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதில், மூத்த மகள் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இரண்டாவது மகள் அனுதாஸ்,19. மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்து வந்தார். கிறிஸ்துதாஸ், கடந்த 2 ஆண்டுகளாக, கிராத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

வழக்கம்போல், நேற்று பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றனர். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அனு தாஸ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு வீட்டுக்கு வந்த கீதா, மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவலறிந்த நித்திரவிளை போலீசார், அனுதாஸின் சடலத்தை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த அனுதாஸ், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.