ETV Bharat / state

சங்கராபுரம் அருகே பெண் எரித்துக் கொலை? - kallakurichi district news

கள்ளக்குறிச்சி: பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

sangarapuram murder
கொலை
author img

By

Published : Feb 6, 2021, 5:41 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மைலாம்பாறை மேட்டில் உள்ள தனியார் பள்ளி பின்புறம் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக் தலைமையிலான காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 35 வயதுடைய பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தம்பதியர் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்து 12 சவரன் நகை திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மைலாம்பாறை மேட்டில் உள்ள தனியார் பள்ளி பின்புறம் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக் தலைமையிலான காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 35 வயதுடைய பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தம்பதியர் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்து 12 சவரன் நகை திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.