ETV Bharat / state

முதலமைச்சர் குமரிக்கு வருகைபுரியும் நாளன்று போராட்டம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்கள்

author img

By

Published : Nov 4, 2020, 11:02 PM IST

கன்னியாகுமரி: சாலை விரிவாக்கப் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காவிட்டால், முதலமைச்சர் கன்னியாகுமரி வரும் நாள் அன்று போராட்டம் நடத்தப்போவதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்கக் கூட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) நாகர்கோவிலில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் டேவிட்சன் பேசும்போது, "நாகர்கோவில் நகரப் பகுதிகளில் சாலை விரிவாக்கத்திற்காக மாநகராட்சி கையகப்படுத்தும் நிலங்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.

உடனடியாக இழப்பீடு வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 10ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் நாளன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நபிகள் நாயகத்தின் கேலி சித்திரம் வரைந்த பிரான்ஸ்: நாகையில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) நாகர்கோவிலில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் டேவிட்சன் பேசும்போது, "நாகர்கோவில் நகரப் பகுதிகளில் சாலை விரிவாக்கத்திற்காக மாநகராட்சி கையகப்படுத்தும் நிலங்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.

உடனடியாக இழப்பீடு வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 10ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் நாளன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நபிகள் நாயகத்தின் கேலி சித்திரம் வரைந்த பிரான்ஸ்: நாகையில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.