ETV Bharat / state

விஜயதசமி நாளில் கோயில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி!

கன்னியாகுமரி: விஜயதசமியை முன்னிட்டு சரஸ்வதி தேவி கோயில்களில் குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கான விதியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

author img

By

Published : Oct 8, 2019, 3:32 PM IST

vijayadashami

நவராத்திரி விழாவின் பத்தாவது நாள் விஜயதசமி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் குழந்தைகளுக்கான கல்வியை தொடங்கும் வகையிலான விதியாரம்பம் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி தேவி கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

விஜயதசமி நாளில் கோயில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வனமாளீஸ்வரா கோயில் சரஸ்வதி சன்னிதானத்தில் தங்க ஊசிகளைக் கொண்டு குழந்தைகளின் நாவில் ‘ஓம்’ என எழுதியும், அரிசியில் அ, அம்மா, அப்பா என எழுதவைத்தும் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பெற்றோர் தங்களின் குழந்தைகளோடு கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பரிவேட்டையை முன்னிட்டு குமரியில் படகுகள் நிறுத்தம்!

நவராத்திரி விழாவின் பத்தாவது நாள் விஜயதசமி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் குழந்தைகளுக்கான கல்வியை தொடங்கும் வகையிலான விதியாரம்பம் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி தேவி கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

விஜயதசமி நாளில் கோயில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வனமாளீஸ்வரா கோயில் சரஸ்வதி சன்னிதானத்தில் தங்க ஊசிகளைக் கொண்டு குழந்தைகளின் நாவில் ‘ஓம்’ என எழுதியும், அரிசியில் அ, அம்மா, அப்பா என எழுதவைத்தும் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பெற்றோர் தங்களின் குழந்தைகளோடு கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பரிவேட்டையை முன்னிட்டு குமரியில் படகுகள் நிறுத்தம்!

Intro:கன்னியாகுமரி: விஜயதசமியை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி உள்ளிட்ட தேவி கோவில்களில் குழந்தைகளின் கல்விகான ஏடு தொடங்கும் விதியாம்பரம் நிகழ்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.Body:நவராத்திரி விழாவின் பத்தாவது நாள் விஜயதசமி விழாவாக சரஸ்வதி உள்ளிட்ட தேவி கோவில்களில் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் குழந்தைகளுக்கான கல்வி தொடங்கும் வகையில் ஏடு தொடங்கும் விதியாம்பரம் நிகழ்சியாக ஒவ்வொரு ஆண்டும் மங்களகரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்று விஜதசமி விழா குமரி மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி உள்ளிட்ட தேவி கோவில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வனமாளீஸ்வரா கோவிலில் உள்ள சரஸ்வதி சன்னிதானத்தில் கோவில் குருக்கள் குழந்தைகளின் நாவில் தங்க ஊசியால் எழுதியும், குழந்தைகளின் கை விரல்களை கொண்டு பச்சரிசியிலும் அகர முதல எழுத்துகளை எழுத செய்து குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைத்தனர்.
விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு ஏடு தொடங்கினால் அவர்களின் வாழ்வில் கல்வி செல்வம் பெருகும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் வந்து உள்ளோம் என பெற்றோர்கள் மகிழ்சியாக தெரிவித்தனர். இதில் ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.