ETV Bharat / state

விசைப்படகு கடலில் மூழ்கும் வீடியோ காட்சிகள்

author img

By

Published : Sep 27, 2022, 1:23 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு கடலில் மூழ்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

விசைப்படகு கடலில் மூழ்கும் பரபரப்பு வீடியோ காட்சி
விசைப்படகு கடலில் மூழ்கும் பரபரப்பு வீடியோ காட்சி

கன்னியாகுமரி: முட்டம் மீன்பிடி தூறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து காரணமாக கடலில் தத்தளித்த 19 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில்,படகு கடலில் மூழ்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் கில்பர்ட் இவருக்கு சொந்தமான "விண்ணேற்பு மாதா" என்ற விசைப்படகில் முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஓட்டுனர் மதன் தலைமையில் கடந்த 22ஆம் தேதி குமரி மாவட்ட மீனவர்கள் 12 பேர் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் 7 பேர் என 19 பேர் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர்.

விசைப்படகு கடலில் மூழ்கும் பரபரப்பு வீடியோ காட்சி

விசைப்படகானது 50 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் 24-ம் தேதி சனிக்கிழமை அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எழுந்த கடல் அலையில் சிக்கி விபத்துக்குள்ளாகி மூழ்க தொடங்கியுள்ளது.விசைப்படகில் இருந்த 19 மீனவர்களும் தண்ணீரில் தத்தளித்தபடி இருந்தனர்.

இந்நிலையில் அந்த வழியாக சென்ற விசைப்படகு மீனவர்கள் கடலில் தத்தளித்த 19 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு "நிகாஷ்" என்ற விசைப்படகு மூலம் முட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த படகு நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் - பேருந்து மீது கல்வீச்சு

கன்னியாகுமரி: முட்டம் மீன்பிடி தூறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து காரணமாக கடலில் தத்தளித்த 19 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில்,படகு கடலில் மூழ்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் கில்பர்ட் இவருக்கு சொந்தமான "விண்ணேற்பு மாதா" என்ற விசைப்படகில் முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஓட்டுனர் மதன் தலைமையில் கடந்த 22ஆம் தேதி குமரி மாவட்ட மீனவர்கள் 12 பேர் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் 7 பேர் என 19 பேர் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர்.

விசைப்படகு கடலில் மூழ்கும் பரபரப்பு வீடியோ காட்சி

விசைப்படகானது 50 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் 24-ம் தேதி சனிக்கிழமை அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எழுந்த கடல் அலையில் சிக்கி விபத்துக்குள்ளாகி மூழ்க தொடங்கியுள்ளது.விசைப்படகில் இருந்த 19 மீனவர்களும் தண்ணீரில் தத்தளித்தபடி இருந்தனர்.

இந்நிலையில் அந்த வழியாக சென்ற விசைப்படகு மீனவர்கள் கடலில் தத்தளித்த 19 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு "நிகாஷ்" என்ற விசைப்படகு மூலம் முட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த படகு நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் - பேருந்து மீது கல்வீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.