ETV Bharat / state

நடு வீதியில் பெண்ணை தாக்கிய கும்பல்: செயின் பறிப்பு!

author img

By

Published : Aug 20, 2020, 2:42 AM IST

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை கீழே தள்ளிவிட்டு செயினை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

நடு வீதியில் பெண்ணை தாக்கிய கும்பல்: செயின் பறிப்பு!
Kanniyakumari chain snatching

கன்னியாகுமரி அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி லட்சுமி தங்கம் (49). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்காக தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரது மகள் வாகனத்தை ஓட்டியுள்ளார்.

அவர்கள் புன்னார்குளம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது, இவர்களது வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், லட்சுமி தங்கத்தின் வாகனத்தை இடித்து தள்ளினர். இதில், நிலைகுலைந்து இருவரும் கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து, கீழே கிடந்த லட்சுமி தங்கத்தின் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க தாலி செயினை பின் தொடர்ந்துவந்த நபர்கள் பறித்துள்ளனர்.

அப்போது அதில் பாதி செயின் லட்சுமி தங்கத்தின் கையில் கிடைத்தது. மீதியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் அவர்கள் தப்பிச் சென்றனர். இதில் லட்சுமி தங்கத்திற்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அஞ்சுகிராமம் காவல் துறையினர் செயின் பறிப்பில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி லட்சுமி தங்கம் (49). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்காக தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரது மகள் வாகனத்தை ஓட்டியுள்ளார்.

அவர்கள் புன்னார்குளம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது, இவர்களது வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், லட்சுமி தங்கத்தின் வாகனத்தை இடித்து தள்ளினர். இதில், நிலைகுலைந்து இருவரும் கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து, கீழே கிடந்த லட்சுமி தங்கத்தின் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க தாலி செயினை பின் தொடர்ந்துவந்த நபர்கள் பறித்துள்ளனர்.

அப்போது அதில் பாதி செயின் லட்சுமி தங்கத்தின் கையில் கிடைத்தது. மீதியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் அவர்கள் தப்பிச் சென்றனர். இதில் லட்சுமி தங்கத்திற்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அஞ்சுகிராமம் காவல் துறையினர் செயின் பறிப்பில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.