ETV Bharat / state

தொடர் விடுமுறை: குமரியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

author img

By

Published : Jan 16, 2020, 11:53 AM IST

கன்னியாகுமரி: பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறையையொட்டி சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

Tourists visiting Kumari
Tourists visiting Kumari

அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இவர்கள் அதிகாலையில் கதிரவன் எழும் (சூரிய உதயம்) அற்புதக் காட்சியையும், மாலையில் கதிரவன் மறையும் ரம்மியமான காட்சியையும் கண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.

மேலும், கடல்நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்தும்வருகிறார்கள்.

சுற்றுலாத் தலங்கள்

இதற்காகப் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை படகு போக்குவரத்து நடைபெற்றுவருகிறது. தற்போது, பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலில் நீராடியும், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், தமிழன்னை பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, கோவளத்தில் உள்ள நீர்விளையாட்டு உல்லாச பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டும் மகிழ்ந்தனர்.

பாதுகாப்பை பலப்படுத்துங்கள்

மேலும், விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காகச் சுற்றுலாப் பயணிகள் படகுத் துறையில் நீண்டவரிசையில் காத்திருந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக படகு போக்குவரத்து நேரம் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

விடுமுறை காரணமாக குமரியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையினால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் தற்போது களைகட்டியுள்ளன. இதனால் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனச் சுற்றுலா ஆர்வலர்களும் பொதுமக்களும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:சமூக நல்லிணக்கத்தை போற்றும் சமத்துவ பொங்கல்

அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இவர்கள் அதிகாலையில் கதிரவன் எழும் (சூரிய உதயம்) அற்புதக் காட்சியையும், மாலையில் கதிரவன் மறையும் ரம்மியமான காட்சியையும் கண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.

மேலும், கடல்நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்தும்வருகிறார்கள்.

சுற்றுலாத் தலங்கள்

இதற்காகப் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை படகு போக்குவரத்து நடைபெற்றுவருகிறது. தற்போது, பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலில் நீராடியும், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், தமிழன்னை பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, கோவளத்தில் உள்ள நீர்விளையாட்டு உல்லாச பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டும் மகிழ்ந்தனர்.

பாதுகாப்பை பலப்படுத்துங்கள்

மேலும், விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காகச் சுற்றுலாப் பயணிகள் படகுத் துறையில் நீண்டவரிசையில் காத்திருந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக படகு போக்குவரத்து நேரம் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

விடுமுறை காரணமாக குமரியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையினால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் தற்போது களைகட்டியுள்ளன. இதனால் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனச் சுற்றுலா ஆர்வலர்களும் பொதுமக்களும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:சமூக நல்லிணக்கத்தை போற்றும் சமத்துவ பொங்கல்

Intro:பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.வியாபாரிகள் மகிழ்ச்சி.Body:tn_knk_03_tourist_crowd_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.வியாபாரிகள் மகிழ்ச்சி.

உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் அற்புத காட்சியையும் மாலையில் சூரியன் மறையும் ரம்மியமான காட்சியையும் கண்டு மகிழ்வார்கள். மேலும், கடல்நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்.

இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

தற்போது, பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இன்று மாலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அவர்கள், கடலில் நீராடி, காந்தி நினைவுமண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், தமிழன்னை பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, கோவளத்தில் உள்ள நீர்விளையாட்டு உல்லாச பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டு மகிழ்ந்தனர். மேலும், விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காக படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலாபயணிகளின் வசதிக்காக படகு போக்குவரத்து நேரம் இன்று முதல், 16, 17 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று படகு ஏறி சென்று பார்வையிட்டனர். கடலில் குளிக்கும் போது, ஆழமான பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்தனர்.சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பையொட்டி கன்னியாகுமரியில் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபோல், குமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு அருவி, சொத்தவிளை கடற்கரை போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தொடர்விடுமுறை கொண்டாட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் தற்போது களைகட்டியுள்ளது இதனால் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.