ETV Bharat / state

வில்சனை கொலை செய்தவர்கள் கேரளாவில் பதுங்கல்!

author img

By

Published : Jan 13, 2020, 8:00 PM IST

குமரி: உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்தவர்கள் கேரளாவில் பதுங்கியிருப்பதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இஜாஸ் பாட்ஷா  பயங்கரவாதி இஜாஸ் பாட்ஷா  si wilson murder case  si murder gun supply  terrorist stayed in kerala said by south zone ig
வில்சனை கொலை செய்தவர்கள் கேரளாவில் நடமாட்டம்

ஜனவரி 8ஆம் தேதி குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து துப்பு துலங்க அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு பேர் வில்சனைக் கொலை செய்தது தெரியவந்தது.

இதனை அடிப்படையாக கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரைத் தேடப்படும் குற்றவாளிகளாக தமிழ்நாடு, கேரளா காவல்துறையினர் அறிவித்தனர். மேலும், அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கொலை நடந்து ஆறுநாட்கள் கடந்த நிலையில் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படாதது காவலர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமிழ்நாடு காவலர்களிடம் கொலையாளிகள் சிக்காத சூழல் நிலவி வந்தால், விரைவில் இந்த வழக்கை நேரடியாக என்.ஐ. ஏ. அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் கொலையாளிகளுக்கு தொடர்புகள் இருப்பதால் மூன்று மாநிலங்களிலும் தனிப்படையினர் தேடுதல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். இருவரின் கடவுச்சீட்டுகளும் முடக்கப்பட்டுள்ளதால் அவர்கள் வெளிநாடு தப்புவதற்கு வாய்ப்பில்லை.

அவர்கள் கேரளாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவலர்கள் கேரளாவில் முகாமிட்டு தேடிவருகின்றனர். இதுகுறித்து தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஷ்வரனிடம் கேட்டபோது, "வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் ஆறு நாட்களாகியும் பிடிபடவில்லை.

அவர்களை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கையை வேகப்படுத்தியுள்ளோம். கேரளாவில் அவர்கள் பதுங்கியிருப்பது ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் இருவரையும் காவலர்கள் நெருங்கிவிட்டனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

இதையும் படிங்க: வில்சனை கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும்!

ஜனவரி 8ஆம் தேதி குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து துப்பு துலங்க அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு பேர் வில்சனைக் கொலை செய்தது தெரியவந்தது.

இதனை அடிப்படையாக கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரைத் தேடப்படும் குற்றவாளிகளாக தமிழ்நாடு, கேரளா காவல்துறையினர் அறிவித்தனர். மேலும், அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கொலை நடந்து ஆறுநாட்கள் கடந்த நிலையில் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படாதது காவலர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமிழ்நாடு காவலர்களிடம் கொலையாளிகள் சிக்காத சூழல் நிலவி வந்தால், விரைவில் இந்த வழக்கை நேரடியாக என்.ஐ. ஏ. அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் கொலையாளிகளுக்கு தொடர்புகள் இருப்பதால் மூன்று மாநிலங்களிலும் தனிப்படையினர் தேடுதல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். இருவரின் கடவுச்சீட்டுகளும் முடக்கப்பட்டுள்ளதால் அவர்கள் வெளிநாடு தப்புவதற்கு வாய்ப்பில்லை.

அவர்கள் கேரளாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவலர்கள் கேரளாவில் முகாமிட்டு தேடிவருகின்றனர். இதுகுறித்து தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஷ்வரனிடம் கேட்டபோது, "வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் ஆறு நாட்களாகியும் பிடிபடவில்லை.

அவர்களை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கையை வேகப்படுத்தியுள்ளோம். கேரளாவில் அவர்கள் பதுங்கியிருப்பது ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் இருவரையும் காவலர்கள் நெருங்கிவிட்டனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

இதையும் படிங்க: வில்சனை கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும்!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டு 6 நாட்களை கடந்த நிலையில் தனிப்படை போலீஸார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். கொலையாளிகளை நெருங்கி விட்டதாக தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஷ்வரன் தெரிவித்தார்.Body:கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தபோது 2 பேர் எஸ்.ஐ.யை கொலை செய்தது தெரியவந்தது.



இதை அடிப்படையாக வைத்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக தமிழக, கேரளா போலீஸார் அறிவித்து தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர். கொலை நடந்து 6 நாட்களை கடந்த நிலையில் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படாதது போலீஸாருக்கு பெரும் சவாலாக உள்ளது.



இவ்வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமிழக போலீஸாரிடம் கொலையாளிகள் சிக்காத சூழல் வந்தால் விரைவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேரடியாக இவ்வழக்கு விசாரணையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.



தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் குற்றவாளிகள் இருவரும் அதிக தொடர்பில் இருப்பதால் 3 மாநிலங்களிலும் தனிப்படையினர் தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். இருவரின் பாஸ்போர்டு முடக்கப்பட்டுள்ளதால் வெளிநாடு தப்ப வாய்ப்பில்லை. அவர்கள் கேரளாவில் ஒளிந்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் கேரளாவில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.



இதுகுறித்து தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஷ்வரனிடம் கேட்டபோது; எஸ்.ஐ. கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் தீவிர விசாரணைக்கு பின்பும் 6 நாட்களாகியும் பிடிபடவில்லை. விரைவில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை வேகப்படுத்தியுள்ளோம். கேரளாவில் அவர்கள் நடமாட்டம் இருப்பது ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் இருவரையும் போலீஸார் நெருங்கி விட்டனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.