ETV Bharat / state

குளச்சலில் அடையாளம் தெரியாத கப்பல் யாருடையது? - விசாரணையில் வெளியான தகவல்

author img

By

Published : Dec 10, 2019, 4:41 PM IST

கன்னியாகுமரி: குளச்சல் கடல் பகுதியில் நின்றுகொண்டிருந்த அடையாளம் தெரியாத கப்பல் குறித்த தகவல் கடலோரக் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

suspected-ship-in-kulachal-sea
suspected-ship-in-kulachal-sea

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியின் கரையோரமாக நேற்றிரவு முதல் அனுமதியின்றி ஒரு கப்பல் நின்றுகொண்டிருக்கிறது. இதனால் இன்று அதிகாலை கட்டுமரம், வள்ளங்களில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் குளச்சல் கடலோரக் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து கடலோரக் காவலர்கள் குளச்சல் கடல் பகுதி சர்வதேச நீர்வழித் தடத்தின் அருகே இருப்பதால் வெளிநாட்டு கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக கரையோரமாக வந்ததா? இல்லை ஆய்வு கப்பலா? என விசாரணை மேற்கொண்டனர்.

அடையாளம் தெரியாத கப்பல்

இந்த விசாரணையில், அந்தக் கப்பல் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய கட்டுமான பணிக்காக கட்டுமான நிறுவனத்தினரால் கோவாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ரிக் இயந்திரத்துடன் கூடிய இழுவை கப்பல் என்பது தெரியவந்தது.

இது குறித்து கடலோரக் காவல் படையினர் கூறுகையில், உடன்குடி கடல் பகுதிக்குள் இந்தக் கப்பல் நுழைவதற்கு நாளைதான் அனுமதி உள்ளது. எனவே இன்று குளைச்சல் கடற்பகுதியில் கப்பலை நிறுத்தியுள்ளனர். அனுமதி இன்றி உள்ளே வந்ததால் வேறு பகுதிக்கு கொண்டுசெல்லுமாறு அறிவுறுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அதீத மது... விபரீத ஆசை...! - தத்தளிக்கும் கப்பல் கேப்டன்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியின் கரையோரமாக நேற்றிரவு முதல் அனுமதியின்றி ஒரு கப்பல் நின்றுகொண்டிருக்கிறது. இதனால் இன்று அதிகாலை கட்டுமரம், வள்ளங்களில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் குளச்சல் கடலோரக் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து கடலோரக் காவலர்கள் குளச்சல் கடல் பகுதி சர்வதேச நீர்வழித் தடத்தின் அருகே இருப்பதால் வெளிநாட்டு கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக கரையோரமாக வந்ததா? இல்லை ஆய்வு கப்பலா? என விசாரணை மேற்கொண்டனர்.

அடையாளம் தெரியாத கப்பல்

இந்த விசாரணையில், அந்தக் கப்பல் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய கட்டுமான பணிக்காக கட்டுமான நிறுவனத்தினரால் கோவாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ரிக் இயந்திரத்துடன் கூடிய இழுவை கப்பல் என்பது தெரியவந்தது.

இது குறித்து கடலோரக் காவல் படையினர் கூறுகையில், உடன்குடி கடல் பகுதிக்குள் இந்தக் கப்பல் நுழைவதற்கு நாளைதான் அனுமதி உள்ளது. எனவே இன்று குளைச்சல் கடற்பகுதியில் கப்பலை நிறுத்தியுள்ளனர். அனுமதி இன்றி உள்ளே வந்ததால் வேறு பகுதிக்கு கொண்டுசெல்லுமாறு அறிவுறுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அதீத மது... விபரீத ஆசை...! - தத்தளிக்கும் கப்பல் கேப்டன்

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் குளச்சல் கடலில் நிற்கும் அடையாளம் தெரியாத கப்பல் உடன்குடி அனல் மின் நிலைய கட்டுமான பணிக்காக கொண்டுவரப்பட்ட ரிக் இயந்திரத்துடன் கூடிய இழுவை கப்பல் என்பது கடலோர காவல்படை விசாரணையில் தெரிய வந்துள்ளது.



Body:கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியின் கரையோரமாக நேற்றிரவு முதல் ஒரு மர்ம கப்பல் நின்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று அதிகாலை கட்டுமரம், வள்ளங்களில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் குளச்சல் கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து கடலோர காவல் நிலைய போலீசார் குளச்சல் கடல் பகுதி சர்வதேச நீர்வழி தடத்தின் அருகே இருப்பதால் வெளிநாட்டு கப்பல் இயந்திர கோளாறு காரணமாக கரையோரமாக வந்ததா? இல்லை ஆய்வு கப்பலா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த கப்பல் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் மின் நிலைய கட்டுமான பணிக்காக கட்டுமான நிறுவனத்தினரால் கோவாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரிக் இயந்திரத்துடன் கூடிய இழுவை கப்பல் என்பது தெரிய வந்தது.
இது குறித்து கடலோர காவல் படை போலீஸார் கூறுகையில், உடன்குடி கடல் பகுதிக்குள் இந்த கப்பல் நுழைவதற்கு நாளைதான் அனுமதி உள்ளது. எனவே இன்று குளைச்சல் கடற்பகுதியில் கப்பலில் நிறுத்தியுள்ளனர். அனுமதி இன்றி உள்ளே வந்ததால் வேறு பகுதிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளோம். என்றனர்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.