ETV Bharat / state

சாமித்தோப்பு தேரோட்டம்: அய்யா முழக்கம் செவி அதிர தேரிழுத்த பக்தர்கள்! - சாமித்தோப்பு தேரோட்டம்

கன்னியாகுமரி: சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அய்யாவழி
author img

By

Published : Sep 2, 2019, 8:01 PM IST

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 11ஆம் நாளான இன்று, தேரோட்டம் பக்தர்கள் சூழ, அய்யா முழக்கம் செவி அதிர சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை அய்யாவுக்குச் சிறப்புப் பணிவிடையும், அதனைத் தொடர்ந்து தலைமை பதியிலிருந்து அய்யா வைகுண்டசாமி தொட்டில் வாகனத்தில் தேருக்குப் புறப்படும் நிகழ்ச்சி அரங்கேறியது.

பகல் 12 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ணத் தேரில் வைகுண்டசாமி வீற்றிருக்கத் தேரோட்டம் தொடங்கியது. முத்துக் குடைகள் முன்செல்ல, அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவ சிவ சிவ அரகரா அரகரா என்ற பக்தி முழக்கமிட்டுத் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சிக்கு குரு பால ஜனாதிபதி தலைமை வகித்தார்.

சாமித்தோப்பு அய்யாவழி தேரோட்டம்

இந்த திருத்தேரானது கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாகச் சுற்றி வந்து வடக்கு ரத வீதியில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வந்து நின்றது. பின், வடக்கு வாசல் முன்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றைச் சுருளாகப் படைத்து வழிபட்டனர். பின்னர் அன்னதானம் நிகழ்வு நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதிலுமிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இத்திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திலிருந்து, சாமித்தோப்புக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேரோட்டத்தையொட்டி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 11ஆம் நாளான இன்று, தேரோட்டம் பக்தர்கள் சூழ, அய்யா முழக்கம் செவி அதிர சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை அய்யாவுக்குச் சிறப்புப் பணிவிடையும், அதனைத் தொடர்ந்து தலைமை பதியிலிருந்து அய்யா வைகுண்டசாமி தொட்டில் வாகனத்தில் தேருக்குப் புறப்படும் நிகழ்ச்சி அரங்கேறியது.

பகல் 12 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ணத் தேரில் வைகுண்டசாமி வீற்றிருக்கத் தேரோட்டம் தொடங்கியது. முத்துக் குடைகள் முன்செல்ல, அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவ சிவ சிவ அரகரா அரகரா என்ற பக்தி முழக்கமிட்டுத் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சிக்கு குரு பால ஜனாதிபதி தலைமை வகித்தார்.

சாமித்தோப்பு அய்யாவழி தேரோட்டம்

இந்த திருத்தேரானது கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாகச் சுற்றி வந்து வடக்கு ரத வீதியில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வந்து நின்றது. பின், வடக்கு வாசல் முன்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றைச் சுருளாகப் படைத்து வழிபட்டனர். பின்னர் அன்னதானம் நிகழ்வு நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதிலுமிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இத்திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திலிருந்து, சாமித்தோப்புக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேரோட்டத்தையொட்டி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Body:கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. விழாவின் 11 இன்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் அதனை தொடர்ந்து தலைமையிலிருந்து அய்யா வைகுண்டசாமி தொட்டில் வாகனத்தில் தேருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் வைகுண்டசாமி வீற்றிருக்க தேரோட்டம் துவங்கியது.முத்து குடைகள் முன்செல்ல காவி உடை அணிந்த அய்யாவழி பக்தர்கள் அய்யா சிவ சிவ சிவ அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை குரு பால ஜனாதிபதி தலைமை வகித்தார் .திருத்தேர் கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக சுற்றி வந்து வடக்கு ரத வீதியில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வடக்கு வாசல் முன்பு வந்து அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வெற்றிலை ,பாக்கு, பழம், பூ ஆகியவைகளை சுருளாக படைத்து வழிபட்டனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் அண்டை மாநில கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி இருந்து சாமிதோப்பு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேரோட்டத்தையொட்டி கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.