ETV Bharat / state

உயிரிழந்த வில்சனுக்காக காவல் ஆளினர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்! - protest for WILSON'S FAMILY demanding relief

கன்னியாகுமரி: வில்சனைக் கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற காவல் ஆளினர்கள் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரியில் காவல் ஆளினர்கள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரியில் காவல் ஆளினர்கள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Jan 10, 2020, 4:39 PM IST


கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8ஆம் தேதியன்று இரவுப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் ஆளினர்கள் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற காவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரியில் காவல் ஆளினர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் வில்சனைக் கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் காவல் துறைக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:

நோபல் வெற்றியாளருடன் பிரதமர் மோடி உரையாடல்


கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8ஆம் தேதியன்று இரவுப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் ஆளினர்கள் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற காவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரியில் காவல் ஆளினர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் வில்சனைக் கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் காவல் துறைக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:

நோபல் வெற்றியாளருடன் பிரதமர் மோடி உரையாடல்

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அவரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் ஆளினர்கள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Body:குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மர்ம நபர்களால் நேற்று முன்தினம் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அவரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் , தமிழகத்தில் காவல்துறைக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் ஆளினர்கள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.