ETV Bharat / state

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தை சீரமைக்க கோரிக்கை! - Request to revamp Kanyakumari bus station

கன்னியாகுமரி:சர்வதேச சுற்றுலாத் தலத்தில் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையிலிருக்கும் கன்னியாகுமரி பேருந்து நிலையத்தை சீரமைத்து அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Kanyakumari bus station
Kanyakumari bus station
author img

By

Published : Dec 9, 2019, 7:06 PM IST

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வெளி மாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கடந்த 27 ஆண்டுகளுக்கு குமரி பேருந்து நிலையத்தை சர்வதேச அளவில் அமைக்க வேண்டும் என எண்ணி, முன்பு மிகவும் அழகான முறையில் பொழுதுபோக்கு பூங்காவுடன் இரவில் மின்னொளியில் ஒளிரும் வகையில் தெற்கு ஆசியாவிலேயே மிகவும் அழகான பேருந்து நிலையமாக அமைக்கப்பட்டது.

ஆனால், தற்போது இந்த பேருந்து நிலையத்திற்குள், வந்துவிட்டால் பேருந்து ஆடி ஆடி துள்ளி துள்ளி பயணிகளின் வயிறு வலியெடுக்கும் நிலை உள்ளது. குறிப்பாக மழை காலங்களில் மழை நீர் தேங்கி குளம் போன்று காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பேருந்திலிருந்து இறங்கும் பயணிகள் தண்ணீருக்குள் இறங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபட்டுள்ளதால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கேரளா, ராமேஸ்வரம் செல்வதற்கு அரசு பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் சுற்றுலா பயணிகளின் அடிப்படை தேவையான சுத்தமான குடிநீர், சுகாதரமான கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை.

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் கன்னியாகுமரி பேருந்து நிலையம்

இதனால், இங்கு சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது எனவே இங்கு வரும் வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரசு போர்கால அடிப்படையில் பேரூந்து நிலையத்தை சீரமைத்து மறுபடியும் எழில் மிகு பேருந்து நிலையமாக மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அங்கு பணிபுரியும் பணியாளர்கள், பயணிகள், சுற்றுலாப்பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

குமரிக்குச் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி!

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வெளி மாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கடந்த 27 ஆண்டுகளுக்கு குமரி பேருந்து நிலையத்தை சர்வதேச அளவில் அமைக்க வேண்டும் என எண்ணி, முன்பு மிகவும் அழகான முறையில் பொழுதுபோக்கு பூங்காவுடன் இரவில் மின்னொளியில் ஒளிரும் வகையில் தெற்கு ஆசியாவிலேயே மிகவும் அழகான பேருந்து நிலையமாக அமைக்கப்பட்டது.

ஆனால், தற்போது இந்த பேருந்து நிலையத்திற்குள், வந்துவிட்டால் பேருந்து ஆடி ஆடி துள்ளி துள்ளி பயணிகளின் வயிறு வலியெடுக்கும் நிலை உள்ளது. குறிப்பாக மழை காலங்களில் மழை நீர் தேங்கி குளம் போன்று காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பேருந்திலிருந்து இறங்கும் பயணிகள் தண்ணீருக்குள் இறங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபட்டுள்ளதால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கேரளா, ராமேஸ்வரம் செல்வதற்கு அரசு பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் சுற்றுலா பயணிகளின் அடிப்படை தேவையான சுத்தமான குடிநீர், சுகாதரமான கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை.

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் கன்னியாகுமரி பேருந்து நிலையம்

இதனால், இங்கு சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது எனவே இங்கு வரும் வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரசு போர்கால அடிப்படையில் பேரூந்து நிலையத்தை சீரமைத்து மறுபடியும் எழில் மிகு பேருந்து நிலையமாக மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அங்கு பணிபுரியும் பணியாளர்கள், பயணிகள், சுற்றுலாப்பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

குமரிக்குச் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி!

Intro:சர்வதேச சுற்றுலா தலத்தில் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையிலிருக்கும் கன்னியாகுமரி பேரூந்து நிலையத்தை சீரமித்து அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பணியாளர்கள், பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Body:tn_knk_02_knyakumari_busstand_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்‌.சுதன்மணி
சர்வதேச சுற்றுலா தலத்தில் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையிலிருக்கும் கன்னியாகுமரி பேரூந்து நிலையத்தை சீரமித்து அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பணியாளர்கள், பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வெளிநாடு மற்றும் உள்நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியிலுள்ள பேருந்து நிலையத்தை சர்வதேச அளவில் அமைக்க வேண்டும் என கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் அழகான முறையில் பொழுதுபோக்கு பூங்காவுடன் இரவில் மின்னொளியில் ஒளிரும் வகையில் தெற்கு ஆசியாவிலேயே மிகவும் அழகான பேரூந்து நிலையமாக அமைக்கப்பட்டது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பகவதியம்மன் கோவில், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை மற்றும் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகிய சுற்றுலாப்பகுதிகளை பார்த்துவிட்டு இந்த பஸ்நிலையத்தையும் பார்த்துவிட்டு தான் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த பேரூந்து நிலையம் தற்போது பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மிகவும் மோசமான நிலையில் கிடக்கிறது. பஸ்கள் பேரூந்து நிலையத்திற்குள் வந்துவிட்டால் பேரூந்து ஆடி ஆடி துள்ளி துள்ளி பயணிகளின் வயிறு வலியெடுக்கும் நிலை உள்ளது. அதிலும் மழை காலம் வந்துவிட்டால் ஒரு சிறிய மழையில் இந்த பேரூந்து நிலையம் குளம் போன்று காட்சியளிக்கிறது. இதனால் பேரூந்திலிருந்து இறங்கும் பயணிகள் தண்ணீருக்குள் தான் இறங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.கன்னியாகுமரிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கன்னியாகுமரி பேரூந்து நிலையம் வந்து தான் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள கோவளம் பீச் அல்லது ராமேஸ்வரம் செல்வதற்காக அரசு பேரூந்துகளையே பயன்படுத்துகிறார்கள்.இந்த குண்டும் குழியுமான பேரூந்து நிலையத்தை பார்த்து முகம் சுழிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேரூந்துநிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தாகத்திற்கு குடிநீர் வசதி கூட, மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகளும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இங்கு சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது எனவே இங்கு வரும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளும் முகம் சுழிக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. எனவே சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியிலுள்ள பேரூந்து நிலையத்தை போர்கால அடிப்படையில் சீரமித்து மறுபடியும் எழில்மிகு பேரூந்து நியைமாக மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அங்கு பணிபுரியும் பணியாளர்கள், பயணிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.