ETV Bharat / state

மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி ரயில் மூலம் கடத்தல்!

author img

By

Published : Sep 12, 2019, 8:45 AM IST

நாகர்கோவில்: குமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு ரயில்கள் மூலம் தினந்தோறும் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு வருகிறது.

ration-rice-smuggling

தமிழ்நாட்டின் தென் எல்லை மாவட்டமான குமரிக்கு மிக அருகில் கேரள மாநிலம் அமைந்துள்ளது. குமரியில் விளையும் காய்கறிகள் பூக்கள் என பல்வேறு பொருட்கள் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதேநேரத்தில் தமிழ்நாட்டில் இலவசமாக கொடுக்கப்படும் ரேஷன் அரிசி மறைமுகமாக கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்த அரிசிக்கு கேரளத்தில் நல்ல விலை கிடைப்பதால், ரேஷன் அரிசி கடத்தல் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசு பேருந்துகள், தனியார் கார்கள், வேன்கள் போன்றவற்றில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்று வந்தது. இதனை தடுப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இது தவிர குமரி-கேரள எல்லையோர காவல்துறையினரும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மேலும் குமரியில் இருந்து பொருட்கள் கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக 36 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதனால் ரேஷன் அரிசி கடத்தலை செய்வதற்கு கடத்தல்காரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி ரயில் மூலம் கடத்தல்!

இதைத் தொடர்ந்து தற்போது கடத்தல்காரர்கள் குமரியில் இருந்து கேரளா செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசியை கடத்த தொடங்கியுள்ளனர். சிறு பைகளில் ரேஷன் அரிசியை அடைத்து ரயிலின் இருக்கையின் கீழ் ஆங்காங்கே வைத்து விடுகின்றனர். பின்னர் கேரள எல்லைப் பகுதிக்குள் ரயில் சென்றதும் அரிசியை ரயிலிலிருந்து இறங்கி கடத்திச் செல்கின்றனர். காவல்துறையினரும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஒவ்வொரு முறை அரிசி கடத்தலைத் தடுக்க காவல்துறையினர் முயற்சி எடுக்கும் போதும் புதுவிதமான முறைகளைப் பயன்படுத்தி கடத்தல்காரர்கள் ரேஷன் அரிசியை தொடர்ந்து கேரளத்திற்கு கடத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் தென் எல்லை மாவட்டமான குமரிக்கு மிக அருகில் கேரள மாநிலம் அமைந்துள்ளது. குமரியில் விளையும் காய்கறிகள் பூக்கள் என பல்வேறு பொருட்கள் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதேநேரத்தில் தமிழ்நாட்டில் இலவசமாக கொடுக்கப்படும் ரேஷன் அரிசி மறைமுகமாக கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்த அரிசிக்கு கேரளத்தில் நல்ல விலை கிடைப்பதால், ரேஷன் அரிசி கடத்தல் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசு பேருந்துகள், தனியார் கார்கள், வேன்கள் போன்றவற்றில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்று வந்தது. இதனை தடுப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இது தவிர குமரி-கேரள எல்லையோர காவல்துறையினரும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மேலும் குமரியில் இருந்து பொருட்கள் கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக 36 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதனால் ரேஷன் அரிசி கடத்தலை செய்வதற்கு கடத்தல்காரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி ரயில் மூலம் கடத்தல்!

இதைத் தொடர்ந்து தற்போது கடத்தல்காரர்கள் குமரியில் இருந்து கேரளா செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசியை கடத்த தொடங்கியுள்ளனர். சிறு பைகளில் ரேஷன் அரிசியை அடைத்து ரயிலின் இருக்கையின் கீழ் ஆங்காங்கே வைத்து விடுகின்றனர். பின்னர் கேரள எல்லைப் பகுதிக்குள் ரயில் சென்றதும் அரிசியை ரயிலிலிருந்து இறங்கி கடத்திச் செல்கின்றனர். காவல்துறையினரும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஒவ்வொரு முறை அரிசி கடத்தலைத் தடுக்க காவல்துறையினர் முயற்சி எடுக்கும் போதும் புதுவிதமான முறைகளைப் பயன்படுத்தி கடத்தல்காரர்கள் ரேஷன் அரிசியை தொடர்ந்து கேரளத்திற்கு கடத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்திலிருந்து ரயில்கள் மூலம் கேரள மாநிலத்திற்கு தினம் தோறும் டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. தமிழக அதிகாரிகள் எவ்வளவோ முயற்சித்தும் ரேஷன் அரிசி கடத்தலை கட்டுப்படுத்த முடியவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.Body:தமிழகத்தின் தென் எல்லை மாவட்டமான குமரிக்கு மிக நெருக்கமாக கேரள மாநிலம் அமைந்துள்ளது. இதனால் குமரியில் விளையும் காய்கறிகள் பூக்கள் என பல்வேறு பொருட்கள் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதேநேரத்தில் தமிழகத்தில் இலவசமாக கொடுக்கப்படும் ரேஷன் அரிசி மறைமுகமாக கேரளத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ரேஷனில் இலவசமாக கொடுக்கப்படும் இந்த அரிசிக்கு கேரளத்தில் நல்ல மார்க்கெட் இருப்பதால் ரேஷன் அரிசி கடத்தல் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அரசு பஸ்கள், தனியார் கார்கள், வேன்கள் போன்றவற்றில் இந்த ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்று வந்தது. இதனை தடுப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இது தவிர குமரி கேரள எல்லையோர போலீஸாரும் மறைமுகமாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மேலும் குமரியில் இருந்து பொருள்கள் கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுவதை தடுப்பதற்காக 36 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
இதையெல்லாம் தாண்டி தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் தொழிலை செய்வதற்கு கடத்தல்காரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து தற்போது கடத்தல்காரர்கள் குமரியில் இருந்து கேரளா செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசியை கடத்த தொடங்கியுள்ளனர்.
சிறு சிறு பைகளில் ரேஷன் அரிசியை அடைத்து ரயிலின் இருக்கையின் கீழ் ஆங்காங்கே வைத்து விடுகின்றனர். பின்னர் கேரள எல்கை பகுதிக்குள் ரயில் சென்றதும் அரிசியை ரயிலிலிருந்து இறங்கி கடத்தல் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசாரும் இந்த ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஒவ்வொரு முறை அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் முயற்சி எடுக்கும்போதும் புதுவிதமான முறைகளைப் பயன்படுத்தி கடத்தல்காரர்கள் ரேஷன் அரிசியை தொடர்ந்து கேரளத்திற்கு கடத்தி வரத்தான் செய்கிறார்கள் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.