ETV Bharat / state

திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியிடம் வன்கொடுமை: இளைஞர் கைது!

author img

By

Published : Aug 30, 2019, 11:04 PM IST

கன்னியாகுமரி: தடிக்காரகோணம் பகுதியில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பாலியல் வன்கொடுமை செய்த அபிலேஷ் கைது

கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரக்கோணம் அருகே வீரப்புலி பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது தூரத்து உறவினரான பத்தாம் வகுப்பு மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், அபிலாஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அந்த மாணவியை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவத்தை மாணவி தனது பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, உடனே மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜினிக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கைதான அபிலாஷ்

இதனைத் தொடர்ந்து சரோஜினி குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து அபிலாஷை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர், தான் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அபிலாஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரக்கோணம் அருகே வீரப்புலி பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது தூரத்து உறவினரான பத்தாம் வகுப்பு மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், அபிலாஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அந்த மாணவியை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவத்தை மாணவி தனது பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, உடனே மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜினிக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கைதான அபிலாஷ்

இதனைத் தொடர்ந்து சரோஜினி குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து அபிலாஷை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர், தான் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அபிலாஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தடிக்காரகோணம் பகுதியில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Body:குமரி மாவட்டம் தடிக்காரக்கோணம் அருகே வீரப்புலி பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் 23. இவர் அதே பகுதியை சேர்ந்த தனது தூரத்து உறவினரான பத்தாம் வகுப்பு மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வந்தார்.
இந்நிலையில் அபிலாஷ் தனது வீட்டில் ஆளில்லாத நேரத்தில் மாணவியை அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவதை மாணவி தனது பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்தார். ஆசிரியை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜினிக்கு தகவல் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து சரோஜினி குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதை தொடர்ந்து அபிலாஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து அபிலாஷை போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.