ETV Bharat / state

கைதியை பைக்கில் அழைத்துச் சென்ற போலீஸ் - சினிமா பாணியில் டிஸ்யூம்... டிஸ்யூம்!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பொது இடத்தில் உதவி ஆய்வாளர்களுடன் மோதலில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்த காவலர் கைது செய்யப்பட்டார்.

author img

By

Published : Jun 2, 2019, 8:19 AM IST

சினிமா பாணியில் சண்டையிட்ட காவலர்கள்

சினிமாவில் காவலர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது போன்ற காட்சிகள் இடம்பெறுவது உண்டு. அதையும் மிகவும் ரசிக்கும் வகையில் இயக்குநர் படமாக்குவது தமிழ் சினிமாவில் அதிகளவில் ரசிகர்கள் பார்த்துவருகின்றனர். இந்நிலையில், நாகர்கோவிலில் காவலர்கள் நான்கு பேர் பொது இடத்தில் சண்டையிட்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக இருப்பவர் ஆறுமுகம். இவரும் தனிப்படை உதவி ஆய்வாளர் சாம்சனும் குற்ற வழக்கில் தொடர்புடைய ஒருவரை விசாரிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நடுவில் வைத்து அழைத்துச் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஆறுமுகம் ஓட்டியுள்ளார்.

அவர்கள் நாகர்கோவில் அடுத்த செட்டிகுளம் சந்திப்பில் சென்றபோது அங்கு நின்றுகொண்டிருந்த காவலர்களான கிருஷ்ணகுமார், சைலஸ் ஆகியோர் குற்றவாளியை மோட்டார் சைக்கிளில் வைத்து அழைத்துச் செல்வதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இதைப்பார்த்த உதவி ஆய்வாளர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களை கண்டித்துள்ளனர். இதனையடுத்து, நால்வரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இது தொடர்பாக, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஆறுமுகம் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, காவலர்களான கிருஷ்ணகுமார், சைலஸ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள சைலசை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணகுமார், ஏற்கனவே வாக்கு எண்ணும் மையத்தில் பணியின்போது குடித்துவிட்டு காவல் துறையினருடன் தகராறில் ஈடுபட்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் காவலர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது போன்ற காட்சிகள் இடம்பெறுவது உண்டு. அதையும் மிகவும் ரசிக்கும் வகையில் இயக்குநர் படமாக்குவது தமிழ் சினிமாவில் அதிகளவில் ரசிகர்கள் பார்த்துவருகின்றனர். இந்நிலையில், நாகர்கோவிலில் காவலர்கள் நான்கு பேர் பொது இடத்தில் சண்டையிட்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக இருப்பவர் ஆறுமுகம். இவரும் தனிப்படை உதவி ஆய்வாளர் சாம்சனும் குற்ற வழக்கில் தொடர்புடைய ஒருவரை விசாரிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நடுவில் வைத்து அழைத்துச் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஆறுமுகம் ஓட்டியுள்ளார்.

அவர்கள் நாகர்கோவில் அடுத்த செட்டிகுளம் சந்திப்பில் சென்றபோது அங்கு நின்றுகொண்டிருந்த காவலர்களான கிருஷ்ணகுமார், சைலஸ் ஆகியோர் குற்றவாளியை மோட்டார் சைக்கிளில் வைத்து அழைத்துச் செல்வதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இதைப்பார்த்த உதவி ஆய்வாளர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களை கண்டித்துள்ளனர். இதனையடுத்து, நால்வரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இது தொடர்பாக, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஆறுமுகம் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, காவலர்களான கிருஷ்ணகுமார், சைலஸ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள சைலசை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணகுமார், ஏற்கனவே வாக்கு எண்ணும் மையத்தில் பணியின்போது குடித்துவிட்டு காவல் துறையினருடன் தகராறில் ஈடுபட்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் பொது இடத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உடன் மோதலில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.


Body:நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஆறுமுகம். இவரும் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சாம்சனும் குற்ற வழக்கில் தொடர்புடைய ஒருவரை விசாரிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நடுவில் வைத்து அழைத்து சென்றனர். மோட்டார் சைக்கிளை ஆறுமுகம் ஓடியுள்ளார். அவர்கள் நாகர்கோவில் அடுத்த செட்டிகுளம் சந்திப்பில் சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்களான கிருஷ்ணகுமார் மற்றும் சைலஸ் ஆகியோர் குற்றவாளிகளை மோட்டார் சைக்கிளில் வைத்து அழைத்து செல்வதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதை பார்த்த எஸ்ஐக்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களை கண்டித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் விதியை மீறி மூன்று பேராக செல்லும் காவலர்கள் என்பதை வீடியோவாக பரவ விடும் எண்ணத்தில் அவர்கள் செல்பேசியில் வீடியோ எடுத்தது தெரிய வந்தது. இதனை எஸ்ஐக்கள் இருவரும் கண்டித்தனர் அவர்களிடம் கிருஷ்ணகுமாரும் சைலசும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் கூடும் பொது இடத்தில் வாக்குவாதம் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து எஸ்ஐக்கள் இருவருக்கும் காவலர்கள் இருவரும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனிப்பிரிவு எஸ் ஆறுமுகம் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீஸ்காரர்கள் கிருஷ்ணகுமார், சைலஸ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து காவலர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள காவலர் சைலசை போலீசார் தேடி வருகின்றனர்


Conclusion:இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ்காரரான கிருஷ்ணகுமார் ஏற்கனவே ஓட்டு எண்ணும் மையத்தில் பணியின்போது குடித்துவிட்டு போலீஸ்காரருடன் தகராறில் ஈடுபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.