ETV Bharat / state

வேலை தேடி வந்தவர்களிடம் பணம் கேட்டு கஞ்சா கும்பல் தாக்குதல்: போலீசார் விசாரணை! - Kanyakumari district news

கன்னியாகுமரி: வேலை தேடி வந்த வெளியூர் நபர்களிடம் பணம் கேட்டு கஞ்சா கும்பல் தாக்கிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணம் கேட்டு கஞ்சா கும்பல் தாக்குதல்
பணம் கேட்டு கஞ்சா கும்பல் தாக்குதல்
author img

By

Published : Sep 4, 2020, 4:16 PM IST

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் சிவா (39). இவர் வேலை தேடி கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். இந்நிலையில், இன்று (செப்.4) அதிகாலையில் சிவா தோவாளை அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் படுத்திருந்தார்.

அப்போது கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சிவா மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு அருவாளால் தலை, கை, கால்களில் வெட்டினர். மேலும், சிவாவிடம் இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துச் சென்றனர். இதையடுத்து, செண்பராமன்புதூர் - பூதப்பாண்டி சாலையில் கோவையைச் சேர்ந்த ரஜேஷ்வரன் என்பவர் நடந்து வந்தார். அவரையும் தாக்கி விட்டு சென்றனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகர்கோவில் டிஎஸ்பி வேணுகோபால், ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் படுகாயங்களுடன் இருந்த இரண்டு நபர்களையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா போதையில் வாகனம் ஓட்டியதால் ஒருவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் சிவா (39). இவர் வேலை தேடி கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். இந்நிலையில், இன்று (செப்.4) அதிகாலையில் சிவா தோவாளை அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் படுத்திருந்தார்.

அப்போது கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சிவா மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு அருவாளால் தலை, கை, கால்களில் வெட்டினர். மேலும், சிவாவிடம் இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துச் சென்றனர். இதையடுத்து, செண்பராமன்புதூர் - பூதப்பாண்டி சாலையில் கோவையைச் சேர்ந்த ரஜேஷ்வரன் என்பவர் நடந்து வந்தார். அவரையும் தாக்கி விட்டு சென்றனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகர்கோவில் டிஎஸ்பி வேணுகோபால், ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் படுகாயங்களுடன் இருந்த இரண்டு நபர்களையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா போதையில் வாகனம் ஓட்டியதால் ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.