மாணவர்களின் கலை நிகழ்ச்சியோடு கொண்டாடப்பட்ட நவராத்திரி விழா! - Performance of students in private school in Nagercoil
கன்னியாகுமரி: நவராத்திரி விழாவின் புராணக்கதையை மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் தனியார் பள்ளியொன்றில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளோடு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி ஒன்பது நாட்கள் போரிட்டு 10ஆவது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதை நினைவூட்டும் வகையில் நவராத்திரிவிழா கொண்டாடப்படுவதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்து வருகிறது.
இதனை நினைவுகூறும் வகையிலும், மாணவர்களின் பன்முகத்தன்மையை வெளிகாட்டும் வகையிலும், புராண கால கதைகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்கவும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் நவராத்திரி விழா கொண்டடப்பட்டது.
இவ்விழாவையொட்டி அப்பள்ளியில் கொழு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்து. மேலும் இன்று அந்த பள்ளியில் மாணவர்களின் ஆடல், பாடல், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இதையும் படியுங்க:
தலையில் நெருப்புடன் ஆடிய சிறுமிகள்- இது நவராத்திரி கொண்டாட்டம்!
Body:நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாள்கள் போரிட்டு 10ஆவது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது.
இதனை நினைவுகூரும் வகையிலும் மாணவர்களின் பண்முக தன்மையையும் வெளிகாட்டவும் புராண கால கதைகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்கவும் நவராத்திரி விழா நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் ஆடல் பாடல் நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளோடு நடைப்பெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.Conclusion: