ETV Bharat / state

'சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க வேண்டும்' - குமரி மக்கள் கோரிக்கை

author img

By

Published : May 6, 2020, 7:32 PM IST

கன்னியாகுமரி: வெளியூர் மக்கள் குமரி மாவட்டத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குமரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க வேண்டும்
சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க வேண்டும்

சிவப்பு மண்டலங்களான சென்னை, கோவை மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து, தங்கள் சொந்த ஊரான குமரி மாவட்டத்திற்கு வாகனங்களில் வரும் வெளியூர் மக்களின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

குமரி எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில், தடுத்து நிறுத்தப்பட்டு, இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 500 பேரிடம் ரத்தம், சளி மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். பரிசோதனை முடிவுகள் இரண்டு நாட்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசோதனை நடத்தப்பட்டவர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். சோதனைச் சாவடி தவிர்த்து, கிளை சாலைகள் வழியாக வெளியூர் மக்கள் குமரி மாவட்டத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று, குமரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் உள்ளவர்கள் உண்ண உணவின்றி சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு போட்ட பின்பு, வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் சென்ற வண்ணம் இருந்து வருகின்றனர்.

அதிலும் சென்னை, விழுப்புரம், கடலூர் போன்ற சிவப்பு மண்டலப் பகுதிகளில் கரோனா தொற்று நோய் நாளுக்கு நாள் அதிகரித்து மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் இந்த சிவப்பு மண்டலப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், மிக அதிக எண்ணிக்கையில் தங்கள் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை, விழுப்புரம் போன்ற சிவப்பு மண்டலப் பகுதிகளுக்குச் சென்ற வெளி மாவட்ட மக்களும் கரோனா தொற்று நோய் அச்சம் காரணமாக, மீண்டும் குமரி மாவட்டத்திற்குத் திரும்பி வருகின்றனர்.

கடந்த சில நாட்களில் மட்டும் சென்னையில் வாழும் குமரி மாவட்ட மக்கள் ஏராளமானவர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

இவ்வாறு வருபவர்கள் குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, வாகனங்களில் வருவதற்கான அனுமதிச் சீட்டுகளை சோதனை செய்த பின்பு ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள ஆரல்வாய்மொழி, இறச்சகுளம் பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

அங்கு வெளியூரில் இருந்து வந்தவர்களிடம் சளி, ரத்தம் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்படுகிறது .

இந்த வகையில் இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 500 பேரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் இரண்டு நாட்களில் தெரிய வரும். பின்னர் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து உரிய அனுமதியின்றி, குமரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கிளை சாலைகள் வழியாக, தினசரி ஏராளமானவர்கள் குமரி மாவட்ட எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து வருவது அதிகரித்து வருகிறது.

இவர்களால் குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து விடுமோ என மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே, அனுமதியின்றி மாவட்டத்திற்குள் நுழையும் வெளியூர் நபர்களைக் கண்டறிந்து, அவர்களை உரிய கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

மேலும் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கிளை சாலைகள் வழியாக வெளியூர் நபர்கள் குமரியில் நுழைவதைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சோதனைகளைக் கடுமையாக்க வேண்டும் என்று குமரி மாவட்ட மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவிட்-19 தடுப்பு மருந்து - மனிதர்கள் மீது பரிசோதனையை தொடங்கிய அமெரிக்கா!

சிவப்பு மண்டலங்களான சென்னை, கோவை மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து, தங்கள் சொந்த ஊரான குமரி மாவட்டத்திற்கு வாகனங்களில் வரும் வெளியூர் மக்களின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

குமரி எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில், தடுத்து நிறுத்தப்பட்டு, இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 500 பேரிடம் ரத்தம், சளி மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். பரிசோதனை முடிவுகள் இரண்டு நாட்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசோதனை நடத்தப்பட்டவர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். சோதனைச் சாவடி தவிர்த்து, கிளை சாலைகள் வழியாக வெளியூர் மக்கள் குமரி மாவட்டத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று, குமரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் உள்ளவர்கள் உண்ண உணவின்றி சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு போட்ட பின்பு, வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் சென்ற வண்ணம் இருந்து வருகின்றனர்.

அதிலும் சென்னை, விழுப்புரம், கடலூர் போன்ற சிவப்பு மண்டலப் பகுதிகளில் கரோனா தொற்று நோய் நாளுக்கு நாள் அதிகரித்து மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் இந்த சிவப்பு மண்டலப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், மிக அதிக எண்ணிக்கையில் தங்கள் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை, விழுப்புரம் போன்ற சிவப்பு மண்டலப் பகுதிகளுக்குச் சென்ற வெளி மாவட்ட மக்களும் கரோனா தொற்று நோய் அச்சம் காரணமாக, மீண்டும் குமரி மாவட்டத்திற்குத் திரும்பி வருகின்றனர்.

கடந்த சில நாட்களில் மட்டும் சென்னையில் வாழும் குமரி மாவட்ட மக்கள் ஏராளமானவர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

இவ்வாறு வருபவர்கள் குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, வாகனங்களில் வருவதற்கான அனுமதிச் சீட்டுகளை சோதனை செய்த பின்பு ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள ஆரல்வாய்மொழி, இறச்சகுளம் பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

அங்கு வெளியூரில் இருந்து வந்தவர்களிடம் சளி, ரத்தம் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்படுகிறது .

இந்த வகையில் இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 500 பேரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் இரண்டு நாட்களில் தெரிய வரும். பின்னர் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து உரிய அனுமதியின்றி, குமரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கிளை சாலைகள் வழியாக, தினசரி ஏராளமானவர்கள் குமரி மாவட்ட எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து வருவது அதிகரித்து வருகிறது.

இவர்களால் குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து விடுமோ என மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே, அனுமதியின்றி மாவட்டத்திற்குள் நுழையும் வெளியூர் நபர்களைக் கண்டறிந்து, அவர்களை உரிய கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

மேலும் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கிளை சாலைகள் வழியாக வெளியூர் நபர்கள் குமரியில் நுழைவதைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சோதனைகளைக் கடுமையாக்க வேண்டும் என்று குமரி மாவட்ட மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவிட்-19 தடுப்பு மருந்து - மனிதர்கள் மீது பரிசோதனையை தொடங்கிய அமெரிக்கா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.