ETV Bharat / state

'குமரியில் தனியார் மதுபானக் கடையை மூட வேண்டும்' - மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மக்கள் மனு! - Close private liquor store in Kumari

கன்னியாகுமரி: தடிக்காரன்கோணம் பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாகத் தொடங்கிய தனியார் மதுபானக் கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

தனியார் மது பான கடையை மூட போரட்டம்
author img

By

Published : Nov 15, 2019, 7:22 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியில் கோயில்கள், மசூதிகள் நிறைந்து காணப்படுகின்றன. பல பகுதிகளைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் இச்சாலை வழியாகவே சென்று வருகிறார்கள்.

இந்நிலையில், தடிக்காரன்கோணம் பெட்ரோல் நிலையம் அருகில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக் கடை அமைப்பதற்குத் தனியாருக்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இதனால், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், பலப் போராட்டங்களும் நடத்தினார்கள்.
ஆனால், பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி அப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனியார் மதுபானக் கடை திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.

தனியார் மதுபானக் கடையை மூடப் போராட்டம்

இதனையடுத்து, தனியார் மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

இதையும் படிங்க: குற்றங்களைக் குறைக்க "ஹலோ போலீஸ்" தொலைபேசி சேவை அறிமுகம்!

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியில் கோயில்கள், மசூதிகள் நிறைந்து காணப்படுகின்றன. பல பகுதிகளைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் இச்சாலை வழியாகவே சென்று வருகிறார்கள்.

இந்நிலையில், தடிக்காரன்கோணம் பெட்ரோல் நிலையம் அருகில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக் கடை அமைப்பதற்குத் தனியாருக்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இதனால், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், பலப் போராட்டங்களும் நடத்தினார்கள்.
ஆனால், பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி அப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனியார் மதுபானக் கடை திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.

தனியார் மதுபானக் கடையை மூடப் போராட்டம்

இதனையடுத்து, தனியார் மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

இதையும் படிங்க: குற்றங்களைக் குறைக்க "ஹலோ போலீஸ்" தொலைபேசி சேவை அறிமுகம்!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தடிகாரகோணம் பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக செயல்பட்டு வரும் தனியார் மது பான கடையை மூட கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்கள். Body:கன்னியாகுமரி மாவட்டம் தடிகாரகோணம் பகுதியில் கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் கீரிப்பாறை, வெள்ளாம்பி, புதுகிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் இச்சாலை வழியாகவே சென்று வருகிறார்கள். இந்த பகுதியில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தடிகாரகோணம் பெட்டோரல் நிலையம் அருகில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கடை அமைப்பதற்க்கு தனியாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் பொதுக்கள் கடும் பாதிப்படைவார்கள் என கூறி அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பல கட்ட போராட்டங்களும் நடத்தினார்கள்.
ஆனாலும் பொதுமக்கள் எதிர்பையும் மீறி அப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக தனியார் மதுபான கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடும் எதிர்ப்பையும் மீறி பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற தனியார் மதுபான கடையை உடனடியாக மூட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட ஏரளமானவர்கள் ஒன்று திரண்டு இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சிதலைவரை சந்தித்து மனு அளித்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.