ETV Bharat / state

தலைக்கேறிய போதை... பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு...

author img

By

Published : Sep 4, 2022, 4:33 PM IST

குழித்துறை சந்திப்பில் மது போதையில் இருவருக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 70 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat

கன்னியாகுமரி: குழித்துறை அருகேவுள்ள மடிச்சல் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையன் (70). கூலித்தொழிலாளியான இவர் நேற்றிரவு (செப்.3) குழித்துறை சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக்கடையில் மது குடிக்கச் சென்றார். இவருடன் பிரஜித் என்ற இளைஞரும் மது குடிக்க வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் அதிகளவு மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

போதையில் இருவரும் கடையில் இருந்து இறங்கி சாலை வழியாக தள்ளுமுள்ளில் ஈடுபட்டவாறு நடந்து சென்ற போது, பிரஜித் முதியவரை பிடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய முத்தையன், அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தலைக்கேறிய போதையால் விபரீதம்.. முதியவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

இச்சம்பந்தமாக களியக்காவிளை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் பொதுமக்கள் கூறிய தகவலின் படி மதுபோதையில் இருந்த பிரஜித்தை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றதோடு முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை... மகள் கவலைக்கிடம்...

கன்னியாகுமரி: குழித்துறை அருகேவுள்ள மடிச்சல் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையன் (70). கூலித்தொழிலாளியான இவர் நேற்றிரவு (செப்.3) குழித்துறை சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக்கடையில் மது குடிக்கச் சென்றார். இவருடன் பிரஜித் என்ற இளைஞரும் மது குடிக்க வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் அதிகளவு மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

போதையில் இருவரும் கடையில் இருந்து இறங்கி சாலை வழியாக தள்ளுமுள்ளில் ஈடுபட்டவாறு நடந்து சென்ற போது, பிரஜித் முதியவரை பிடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய முத்தையன், அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தலைக்கேறிய போதையால் விபரீதம்.. முதியவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

இச்சம்பந்தமாக களியக்காவிளை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் பொதுமக்கள் கூறிய தகவலின் படி மதுபோதையில் இருந்த பிரஜித்தை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றதோடு முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை... மகள் கவலைக்கிடம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.