ETV Bharat / state

கன்னியாகுமரி மீன்பிடித் துறைமுகத்தை முற்றுகையிட்ட நெல்லை  மீனவர்கள்!

author img

By

Published : Oct 1, 2019, 6:57 AM IST

கன்னியாகுமரி: சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை, 200க்கும் மேற்பட்ட நெல்லை மாவட்ட மீனவர்கள் கடல்மார்க்கமாக வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

kanyakumari

கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீனவர்களுக்கும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இடிந்தகரை, கூத்தன்குழி மீனவர்களுக்கும் கடலில் மீன் பிடிப்பதில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டுவந்து.

இந்நிலையில், நெல்லை மாவட்ட மீனவர்கள் 200க்கும் மேற்பட்டோர் படகுகளில் கடல்மார்க்கமாக கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் ஏராளமான காவலர்கள் துறைமுகத்தில் குவிக்கப்பட்டனர். மேலும் கடலோர காவல்படையினரால் நெல்லை மீனவர்கள் துறைமுகத்திற்குள் நுழையாமல் தடுக்கப்பட்டனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி மீனவர் சங்க பிரதிநிதி மைக்கேல், 'நெல்லை மாவட்ட மீனவர் ஒருவர், சின்னமுட்டம் துறைமுகம் வந்து மீன்களை வாங்கி விற்பனை செய்துவந்தார்.

வாங்கிய மீன்களுக்கு அவர் பணம் தரவில்லை. இதனால் அவரிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்தோம். இதை அவர் நெல்லை மீனவர்களிடம் வேறுவிதமாக கூறி போராட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார்'. இவ்வாறு கூறினார். மேலும், கடலோர காவல்படையினரால் நெல்லை மீனவர்கள் திருப்பி அனுப்பட்டனர்.

இதையும் பார்க்க:

சிறிய மீன்பிடித் துறைமுகத்திற்கு வழங்கப்பட்டது ஆணை - மீனவர்கள் மகிழ்ச்சி!

கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீனவர்களுக்கும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இடிந்தகரை, கூத்தன்குழி மீனவர்களுக்கும் கடலில் மீன் பிடிப்பதில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டுவந்து.

இந்நிலையில், நெல்லை மாவட்ட மீனவர்கள் 200க்கும் மேற்பட்டோர் படகுகளில் கடல்மார்க்கமாக கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் ஏராளமான காவலர்கள் துறைமுகத்தில் குவிக்கப்பட்டனர். மேலும் கடலோர காவல்படையினரால் நெல்லை மீனவர்கள் துறைமுகத்திற்குள் நுழையாமல் தடுக்கப்பட்டனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி மீனவர் சங்க பிரதிநிதி மைக்கேல், 'நெல்லை மாவட்ட மீனவர் ஒருவர், சின்னமுட்டம் துறைமுகம் வந்து மீன்களை வாங்கி விற்பனை செய்துவந்தார்.

வாங்கிய மீன்களுக்கு அவர் பணம் தரவில்லை. இதனால் அவரிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்தோம். இதை அவர் நெல்லை மீனவர்களிடம் வேறுவிதமாக கூறி போராட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார்'. இவ்வாறு கூறினார். மேலும், கடலோர காவல்படையினரால் நெல்லை மீனவர்கள் திருப்பி அனுப்பட்டனர்.

இதையும் பார்க்க:

சிறிய மீன்பிடித் துறைமுகத்திற்கு வழங்கப்பட்டது ஆணை - மீனவர்கள் மகிழ்ச்சி!

Intro:கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை கடல்மார்க்கமாக 200க்கும் மேற்பட்ட படகுகளில் வந்து நெல்லை மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட்டதால் பதட்டம். ஏராளமான போலீஸ் கடற்கரையில் குவிப்பு.


Body:கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை கடல்மார்க்கமாக 200க்கும் மேற்பட்ட படகுகளில் வந்து நெல்லை மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட்டதால் பதட்டம். ஏராளமான போலீஸ் கடற்கரையில் குவிப்பு. கடலோர காவல்படை குடும்பத்தினர் ஆழ்கடலில் மீன் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீனவர்களுக்கும் இடிந்தகரை மற்றும் கூத்தன்குழி உள்ளிட்ட நெல்லை மாவட்ட மீனவர்களுக்கும் கடலில் மீன் பிடிப்பதில் அடிக்கடி பிரச்சினைகளில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை கடல்மார்க்கமாக 200க்கும் மேற்பட்ட படகுகளில் வந்து நெல்லை மாவட்ட மீனவர்கள் முற்றுகை இட்டதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதனால் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீஸ் கடற்கரையில் குவிக்கப்பட்டனர். கடலோர காவல்படை குடும்பத்தினரால் கடலில் மீனவர்கள் தடுத்து நிறுத்தபட்டது. பதட்டம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை மற்றும் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து சின்னமுட்டம் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி ஊர் தலைவரும் மீனவர் சங்க பிரதிநிதியுமான மைக்கேல் செய்தியாளர்களிடம் கூறுகையில் சின்னமுட்டத்தில் வந்து எங்களிடம் மீன் எடுத்து விற்பனைக்கு கொண்டு சென்ற நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் மீன் கொள்முதல் செய்வதற்கு உரிய நேரத்தில் பணம் தரவில்லை. பலமுறை கேட்டும் பணம் தராத நிலையில் நெல்லை மாவட்டத்திலுள்ள மீனவர்களிடம் இந்த பணம் தர வேண்டியதை கூறாமல் வேறு பிரச்சினைகளை கூறி போராட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார். அவர் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலமுறை பேச்சுவார்த்தைகளுக்கு அனைத்தும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை சுமுகமான பேச்சுவார்த்தை விட்டுவிட்டு கடல்மார்க்கமாக இவ்வாறு கன்னியாகுமரி மீனவர்களை அச்சுறுத்துவது நல்லதல்ல இது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து சின்னமுட்டம் துறைமுகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சி செய்தனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் அதிவிரைவு ரோந்து படகு மூலம் கடலில் தடுத்து நிறுத்தி அங்கேயே திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் சின்னமுட்டம் துறைமுகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கடற்கரையில் பதட்டம் நீடித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.