ETV Bharat / state

பிரதமர் பதவியேற்பு விழா.... பாஜக துணைத் தலைவருக்கு அழைப்பு

author img

By

Published : May 30, 2019, 12:19 PM IST

கன்னியாகுமரி: பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர்களில்  ஒருவரான எம் ஆர் காந்திக்கு பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

mr gandhi

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. இன்று இரவு ஏழு மணிக்கு மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர். இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பலரும் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் பாஜகவின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர்களில் ஒருவரும், குமரி மாவட்ட மூத்த பாஜக தலைவருமான எம்.ஆர் காந்திக்கு பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காந்தி இன்று காலை ஆறு மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. இன்று இரவு ஏழு மணிக்கு மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர். இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பலரும் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் பாஜகவின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர்களில் ஒருவரும், குமரி மாவட்ட மூத்த பாஜக தலைவருமான எம்.ஆர் காந்திக்கு பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காந்தி இன்று காலை ஆறு மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.

கன்னியாகுமரி: தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர்களில்  ஒருவரும், குமரி மாவட்ட மூத்த பாஜக தலைவருமான எம் ஆர் காந்திக்கு டெல்லியில் இருந்து திடீர் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. இன்று மாலை ஏழு மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர் .

இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வெளிநாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பலரும் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு எல்லாம் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களில் ஒருவரும் குமரி மாவட்ட மூத்த பாஜக தலைவருமான எம் ஆர் காந்திக்கு பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எம் ஆர் காந்தி இன்று காலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

பின்னர் அவர் டெல்லியில் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம் ஆர் காந்தியை கொலை செய்ய கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கும்பல் முயற்சித்தது. இதில் அரிவாளால் வெட்டப்பட்ட எம் ஆர் காந்தி படுகாயங்களுடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.