ETV Bharat / state

அமைச்சருக்காக வைத்த பேனர்கள் மாநகராட்சியால் அகற்றம் - கன்னியாகுமாரியில் ஃபிளக்ஸ் போர்டுகளை மாநகராட்சி அகற்றம்

நாகர்கோயில்: தொழில்துறை அமைச்சர் சம்பத்தை வரவேற்று அதிமுகவினர் வைத்திருந்த பேனர்களை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.

Minister Sampath flux boards removed by corporation
author img

By

Published : Sep 14, 2019, 4:27 PM IST

சென்னை பள்ளிக்கரணையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது அதிமுகவினர் வைத்த பேனர் சரிந்து விழுந்ததால் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்தது.

இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அமைச்சர் எம்.சி. சம்பத் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்தார். அவரை வரவேற்பதற்காக அதிமுகவினர் நிகழ்ச்சி நடைபெறும் தனியார் கல்லூரி அமைந்துள்ள சுங்கான்கடை பகுதியில் சாலையோரங்களில் பேனர்களை வைத்திருந்தனர்.

சென்னையில் நேற்று நடந்த சம்பவம் குறித்து நீதிமன்றம் கண்டித்த பிறகும் அந்த உத்தரவுகளை மீறி அதிமுகவினர் குமரி மாவட்டத்தில் பேனர்களை வைத்திருந்தது மக்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பேனர்களை மாநகராட்சி அலுவலர்கள் அப்புறப்படுத்தினர்.பேனர் போர்டுகள் அகற்றம்

சென்னை பள்ளிக்கரணையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது அதிமுகவினர் வைத்த பேனர் சரிந்து விழுந்ததால் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்தது.

இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அமைச்சர் எம்.சி. சம்பத் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்தார். அவரை வரவேற்பதற்காக அதிமுகவினர் நிகழ்ச்சி நடைபெறும் தனியார் கல்லூரி அமைந்துள்ள சுங்கான்கடை பகுதியில் சாலையோரங்களில் பேனர்களை வைத்திருந்தனர்.

சென்னையில் நேற்று நடந்த சம்பவம் குறித்து நீதிமன்றம் கண்டித்த பிறகும் அந்த உத்தரவுகளை மீறி அதிமுகவினர் குமரி மாவட்டத்தில் பேனர்களை வைத்திருந்தது மக்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பேனர்களை மாநகராட்சி அலுவலர்கள் அப்புறப்படுத்தினர்.பேனர் போர்டுகள் அகற்றம்

Intro:கன்னியாகுமரி: குமரி வந்த தொழில்துறை அமைச்சர் சம்பத்தை வரவேற்று நீதிமன்ற உத்தரவையும் மீறி அதிமுகவினர் சாலை முழுக்க பிளக்ஸ் போர்டு வைத்து பொதுமக்களுக்கு இடையூறு. மாநகராட்சி அதிகாரிகள் பிலக்ஸ் போர்டுகளை அகற்றியதால் பரபரப்பு. Body:பொது மக்களுக்கு இடையூறாக சாலைகளில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அந்த உத்தரவையும் மீறி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், தனியார் கல்லூரிகள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களுக்காக சாலையோரங்களில் பொதுமக்களின் நடைபாதைகளை மறைத்து விளம்பர பதாகைகளை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் அதிமுகவினர் வைத்த பிளக்ஸ் போர்டு சாய்ந்து விழுந்தது. இதில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து பிளக்ஸ் வைத்தது தொடர்பாக பல்வேறு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் நீதிமன்றமும் இதனை வன்மையாக கண்டித்து இருந்தது.
இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் வந்தார். அவரை வரவேற்பதற்காக அதிமுகவினர் நிகழ்ச்சி நடைபெறும் தனியார் கல்லூரி அமைந்துள்ள சுங்கான்கடை பகுதியில் சாலையோரங்களில் அலங்கார வளைவுகளையும் பொதுமக்களுக்கு இடையூறாக பிளக்ஸ் போர்டு களையும் வைத்துள்ளனர்.
சென்னையில் இவ்வளவு பெரிய கொடூர சம்பவம் நிகழ்ந்த பிறகும், அதனை நீதிமன்றம் கண்டித்த பிறகும் அந்த உத்தரவுகளை மீறி அதிமுகவினர் குமரி மாவட்டத்தில் பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதனிடையே பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பிளக்ஸ் போர்டுகளை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அப்புற படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.