ETV Bharat / state

விளம்பரம் தேடுவதே ஸ்டாலினுக்கு வேலை - அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி - admk slams dmk president

கன்னியாகுமரி: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விளம்பரம் தேடுவதே வேலை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி
author img

By

Published : Sep 19, 2019, 4:32 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பால் உற்பத்தியாளர் சங்க கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

"இந்தி திணிக்கப்பட்டுவிட்டது என கூறி திமுகவினர் பொய்யான வதந்தியை கிளப்பி மாணவர்களை திசை திருப்பி போராட்டத்தை தூண்டுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனது நாக்கை அறுத்துவிடுவதாக கூறும் காங்கிரஸ் கட்சியினர் தைரியம் இருந்தால் எனது அருகில் வரட்டும். அப்போது தெரியும் யார் நாக்கு அறுபடும் என்று.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

காங்கிரஸ் தற்போது இத்தாலி காங்கிரஸ். இப்போது அக்கட்சியில் இருப்பவர்கள் இந்தியர்கள் இல்லை. ராஜீவ்காந்தி காதலித்ததற்காக அவர்கள் இந்தியாவை ஆள முடியாது. சோனியா இந்தியராக இருந்திருந்தால் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் பிணமாகி இருக்க மாட்டார்கள். விலை வாசி உயர்வு என்பது இயல்புதான். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் பால் விலை குறைவு.

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ மரணம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுபஸ்ரீ குடும்பத்திற்கு உதவி செய்ய அரசு தயாராக உள்ளது.
எந்த காரியத்தை செய்தாலும் விளம்பரத்துடன் செய்வது ஸ்டாலினின் வேலை, எந்த விளம்பரமும் இல்லாமல் மக்கள் தொண்டு செய்வது எடப்பாடி பழனிசாமியின் வேலை. பச்சை தமிழன் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை உலகம் பாராட்டுகிறது. திமுகவின் செயல்பாடு மட்டமாக இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க:

'கருணாநிதியாலேயே செய்யமுடியல ஸ்டாலின் செஞ்சிடுவாரா என்ன?' - ரகளைய தொடங்கிய ராஜேந்திர பாலாஜி

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பால் உற்பத்தியாளர் சங்க கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

"இந்தி திணிக்கப்பட்டுவிட்டது என கூறி திமுகவினர் பொய்யான வதந்தியை கிளப்பி மாணவர்களை திசை திருப்பி போராட்டத்தை தூண்டுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனது நாக்கை அறுத்துவிடுவதாக கூறும் காங்கிரஸ் கட்சியினர் தைரியம் இருந்தால் எனது அருகில் வரட்டும். அப்போது தெரியும் யார் நாக்கு அறுபடும் என்று.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

காங்கிரஸ் தற்போது இத்தாலி காங்கிரஸ். இப்போது அக்கட்சியில் இருப்பவர்கள் இந்தியர்கள் இல்லை. ராஜீவ்காந்தி காதலித்ததற்காக அவர்கள் இந்தியாவை ஆள முடியாது. சோனியா இந்தியராக இருந்திருந்தால் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் பிணமாகி இருக்க மாட்டார்கள். விலை வாசி உயர்வு என்பது இயல்புதான். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் பால் விலை குறைவு.

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ மரணம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுபஸ்ரீ குடும்பத்திற்கு உதவி செய்ய அரசு தயாராக உள்ளது.
எந்த காரியத்தை செய்தாலும் விளம்பரத்துடன் செய்வது ஸ்டாலினின் வேலை, எந்த விளம்பரமும் இல்லாமல் மக்கள் தொண்டு செய்வது எடப்பாடி பழனிசாமியின் வேலை. பச்சை தமிழன் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை உலகம் பாராட்டுகிறது. திமுகவின் செயல்பாடு மட்டமாக இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க:

'கருணாநிதியாலேயே செய்யமுடியல ஸ்டாலின் செஞ்சிடுவாரா என்ன?' - ரகளைய தொடங்கிய ராஜேந்திர பாலாஜி

Intro:கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் சுமார் 20 லட்சம் ருபாய் செலவில் கட்டி முடிக்கபட்ட பால் உற்பத்தியாளர் சங்க கூடுதல் கட்டிடத்தை தமிழக பால்வளத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.Body:tn_knk_05_minister_newbulding_opening_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் சுமார் 20 லட்சம் ருபாய் செலவில் கட்டி முடிக்கபட்ட பால் உற்பத்தியாளர் சங்க கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறும் போது ஒவ்வொரு கட்சியும் அவர்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என நினைப்பது இயல்பு, அதே போன்றுதான் அமித்ஷா பேசி உள்ளார். நாட்டின் பிரதமர் சமஸ்கிருத மொழியை விட மூத்த மொழி தமிழ் மொழி என கூறி உள்ளார், எனவே அதுகுறித்து விவாதிக்க தேவையில்லை திமுக இந்தி திணிக்கப்பட்டு விட்டது என கூறி பொய்யான வதந்தியை கிளப்பி மாணவர்களை திசை திருப்பி போராட்டத்தை தூண்டுகிறது, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனது நாக்கை அறுத்து விடுவதாக கூறும் காங்கிரஸ் கட்சியினர் தைரியம் இருந்தால் எனது அருகில் வரட்டும். அப்போது தெரியும் யார் நாக்கு அறுபடும் என்று. திமுக போராட்டம் வீண் வதந்தியை கிளப்பி கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி. சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியை விரும்பும் தொண்டர்கள் அதிமுகவினர், காங்கிரஸ் சுதந்திர போராட்ட காங்கிரஸ் இல்லை அது தற்போது இத்தாலி காங்கிரஸ், இப்போது காங்கிரசில் இருப்பவர்கள் இந்தியர்கள் இல்லை. சோனியா இந்த நாட்டில் வாழலாம் ஆனால் ஆள நினைக்க கூடாது. அது முட்டாள் தனம் மூட தனம், ராகுல் காந்தியை பற்றி நான் சொல்லியது சரிதான். அவர்களை எவ்வாறு மதிக்க முடியும் , ராஜுகாந்தி காதலித்ததற்காக அவர்கள் ஆளா முடியாது, சோனியா இந்தியராக இருந்து இருந்தால் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் பிணமாகி இருக்க மாட்டார்கள், ஒரு இனத்தையே அழித்து பிணமாக்கிய சோனியா ஆட்சிக்கு தலைமை தாங்க கூடாது விலை வாசி உயர்வு என்பது இயல்புதான், பால் விலையேற்றம் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள விலையேற்றம் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் பால் விலை குறைவு. பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ மரணம் கவலையை உருவாக்கி உள்ளது, சுபஸ்ரீ குடும்பத்திற்கு உதவி செய்ய அரசு தயாராக உள்ளது ஆனால் நாங்கள் சென்றால் பிரச்சனையை உருவாக்க திமுக காத்து இருக்கிறது. எது செய்தாலும் விளம்பரத்துடன் அந்த காரியத்தை செய்வது ஸ்டாலினின் வேலை, எந்த விளம்பரமும் இல்லாமல் மக்கள் தொண்டு செய்வது எடப்பாடியார் வேலை பச்சை தமிழன் எடப்பாடியார் ஆட்சியை உலகம் பாராட்டுகிறது. திமுகவின் செயல்பாடு மட்டமாக, அசிங்கமாக, கேவலமாக, அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. என அவர் கூறினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.