ETV Bharat / state

‘டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும்’ - ஜி.ராமகிருஷ்ணன் - கன்னியாகுமரி மாவட்டச் செய்திகள்

கன்னியாகுமரி: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

kanniyakumari
kanniyakumari
author img

By

Published : Feb 1, 2020, 7:38 PM IST

இதுகுறித்து கன்னியாகுமரி பார்வதிபுரம் கட்சி அலுவலகத்தில் பேசிய அவர், “குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறுகையில், ‘காந்தியின் கனவைத்தான் நாங்கள் நனவாக்கியுள்ளோம். காந்தி சொன்னதன் அடிப்படையில்தான் குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளோம்’ என்கிறார். இதனை ஏற்க முடியாது.

ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

அவரின் இந்தக்கருத்து காந்தியை இரண்டாவது முறையாக படுகொலை செய்வதற்கு சமம்” என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நெல் கொள்முதல் நடைபெற்றுவருகிறது. அரசாங்கம் நெல் கொள்முதலுக்கு கொடுக்கும் விலை, போதுமானதாக இல்லை என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும். குரூப் 2, குரூப் 4 முறைகேடுகளில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என்றார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது - முத்தரசன்

இதுகுறித்து கன்னியாகுமரி பார்வதிபுரம் கட்சி அலுவலகத்தில் பேசிய அவர், “குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறுகையில், ‘காந்தியின் கனவைத்தான் நாங்கள் நனவாக்கியுள்ளோம். காந்தி சொன்னதன் அடிப்படையில்தான் குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளோம்’ என்கிறார். இதனை ஏற்க முடியாது.

ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

அவரின் இந்தக்கருத்து காந்தியை இரண்டாவது முறையாக படுகொலை செய்வதற்கு சமம்” என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நெல் கொள்முதல் நடைபெற்றுவருகிறது. அரசாங்கம் நெல் கொள்முதலுக்கு கொடுக்கும் விலை, போதுமானதாக இல்லை என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும். குரூப் 2, குரூப் 4 முறைகேடுகளில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என்றார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது - முத்தரசன்

Intro:கன்னியாகுமரி: தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4, குரூப் 2 முறைகேடுகளை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.Body:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குடியரசு தலைவரின் கூற்றை நாம் ஏற்கமுடியாது. காந்தியின் கனவைத்தான் நாங்கள் நனவாக்கியுள்ளோம். காந்தி சொன்ன அடிப்படையில் தான் குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என கூறியுள்ளார். ஜனாதிபதியின் இந்த கூற்று காந்தியை இரண்டாவது முறையாக படுகொலை செய்வதற்கு சமம்.

1955ம் ஆண்டிலேயே குடியுரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சொல்லப்போனால் அஸ்ஸாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் மற்ற மாநிலங்களுக்கு தேவையற்றது. திடீரென அவர்கள் இந்த சட்டத்தை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு வருகிற போதுதான் எதிர்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நெல் கொள்முதல் பல மாவட்டங்களில் நடைபெற்றுவருகிறது. அரசாங்கம் நெல் கொள்முதலுக்கு கொடுக்கும் விலை, போதுமானதாக இல்லை என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.

குரூப் 4, குரூப் 2 முறைகேடுகளை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு குழந்தைகள் மத்தியில் அச்சத்தை பீதியை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.