ETV Bharat / state

பெண்கள் தற்காப்புக் கலைகள் கற்கவேண்டி மாணவிகள் விழிப்புணர்வு!

குமரி: பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், பெண்களின் தற்காப்புக்கான செய்முறை விளக்கமளித்து கல்லூரி விழாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

author img

By

Published : Apr 13, 2019, 2:26 PM IST

Martial art

கன்னியாகுமரி தனியார் கல்லூரி ஒன்றில் விளையாட்டு விழா நடைபெற்றது. அதில் மாணவிகள் தற்காப்புக் கலைக்கான செய்முறை விளக்கமளித்தனர். மேலும் தற்போது நாட்டில் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ளும் நோக்கில் தற்காப்புக் கலைகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

கல்லூரி விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு தற்காப்பு திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் பொதுமக்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி தனியார் கல்லூரி ஒன்றில் விளையாட்டு விழா நடைபெற்றது. அதில் மாணவிகள் தற்காப்புக் கலைக்கான செய்முறை விளக்கமளித்தனர். மேலும் தற்போது நாட்டில் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ளும் நோக்கில் தற்காப்புக் கலைகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

கல்லூரி விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு தற்காப்பு திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் பொதுமக்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

TN_KNK_02_12_SPORTS_DAY_SCRIPT_TN10005 தற்காப்புக்கலையின் அவசியத்தை பெண்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் கன்னியாகுமரி அருகேயுள்ள கல்லூரியின் விளையாட்டு விழாவில் தற்காப்பு கலைகளை மாணவிகள் செய்து காட்டினர். தற்போது பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பாலியல் கொடுமைகள் நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் பெண்கள் வெளியில் சென்றுவிட்டு பயமின்றி வீடுகளுக்கு திரும்பும் சூழல் நாட்டில் குறைந்து கொண்டே வருகின்றது. எனவே பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. இதனால் பெண்கள் மத்தியில் தற்காப்புக்கலைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி அருகேயுள்ள விவேகானந்தா கல்லூரியின் விளையாட்டு விழாவில் இதழியல் மாணவிகளின் தற்காப்பு கலைகள் குறித்த அவர்களது திறமைகளை அவர்கள் செய்து காட்டினர். இதனை ஏராளமானோர் கண்டுகளித்து அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். விஷுவல்: கல்லூரி விளையாட்டுவிழா மற்றும் மாணவிகளின் தற்காப்பு கலைகள் பேட்டி: கவிதா வாமனன்(பேராசிரியை)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.