ETV Bharat / state

நகை பட்டறை உரிமையாளர் தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை!

author img

By

Published : Jun 16, 2019, 10:29 PM IST

கன்னியாகுமரி: நகை பட்டறை உரிமையாளர் எந்த காரணமுமின்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

death

குமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த ஊட்டுவாழ்மடம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (57). இவர், மீனாட்சிபுரத்தில் நகை பட்டறை வைத்து, நகைகளில் கல் பதிக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதையடுத்து உறவினர்கள் அவரைத் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வீட்டுக்கு வந்த சுப்பிரமணியன், வீட்டில் இருந்தவர்களிடம் பட்டறைக்கு செல்வதாக கூறி சென்றார்.

தற்கொலை செய்துகொண்ட சுப்பிரமணியன்
தற்கொலை செய்துகொண்ட சுப்பிரமணியன்

இரவாகியும் அவர் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் பட்டறைக்கு சென்று பார்த்தபோது உள் பக்கமாக பூட்டிக்கொண்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சுப்பிரமணியனின் உறவினர்கள் கோட்டாறு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், சுப்பிரமணியனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவத்திற்கு கடன் தொல்லை காரணமா அல்லது வேறு ஏதும் காரணங்கள் இருக்கின்றனவா என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த ஊட்டுவாழ்மடம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (57). இவர், மீனாட்சிபுரத்தில் நகை பட்டறை வைத்து, நகைகளில் கல் பதிக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதையடுத்து உறவினர்கள் அவரைத் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வீட்டுக்கு வந்த சுப்பிரமணியன், வீட்டில் இருந்தவர்களிடம் பட்டறைக்கு செல்வதாக கூறி சென்றார்.

தற்கொலை செய்துகொண்ட சுப்பிரமணியன்
தற்கொலை செய்துகொண்ட சுப்பிரமணியன்

இரவாகியும் அவர் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் பட்டறைக்கு சென்று பார்த்தபோது உள் பக்கமாக பூட்டிக்கொண்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சுப்பிரமணியனின் உறவினர்கள் கோட்டாறு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், சுப்பிரமணியனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவத்திற்கு கடன் தொல்லை காரணமா அல்லது வேறு ஏதும் காரணங்கள் இருக்கின்றனவா என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நகை பட்டறை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Body:குமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த ஊட்டுவாழ்மடம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் 57. இவர், மீனாட்சிபுரத்தில் நகை பட்டறை வைத்து, நகைகளில் கல் பதிக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.

இதையடுத்து உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில், நேற்று முன் தினம் மீண்டும் வீட்டுக்கு வந்த சுப்பிரமணியன், வீட்டில் இருந்தவர்களிடம் பட்டறைக்கு செல்வதாக கூறி சென்றார்.

இரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், இன்று உறவினர்கள் பட்டறைக்கு சென்று பார்த்தனர். அப்போது பட்டறையின் கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சுப்பிரமணியன் தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கோட்டாறு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுப்பிரமணியன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்காக காரணம் தெரியவில்லை. இருப்பினும், சுப்பிரமணியனுக்கு கடன் தொல்லை இருந்ததாகவும், அதன் காரணமாக, தற்கொலை செய்து இருக்கலாமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று, கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.