ETV Bharat / state

மாநகராட்சி குப்பைக் கிடங்கில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு!

author img

By

Published : Jan 11, 2020, 8:19 AM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை காவல்துறையினர் கண்டெடுத்தனர்.

நாகர்கோவில் ஆண் சடலம் மீட்பு கன்னியாகுமரி ஆண் சடலம் மீட்பு நாகர்கோவில் கொலை வழக்கு குப்பை கிடங்கில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு Male Dead Body Recoverd In Nagarcoil Male Dead Body Recoverd In Kanniyakumari Nagarcoil Murder Case Unidentified male corpse recovery in the garbage warehouse
Male Dead Body Recoverd In Nagarcoil

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள வட்டவிளை ராயல் கார்டன் பகுதியில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு உள்ளது. அங்கு மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும். அப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோட்டார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தலையில் கற்களைக் கொண்டு தாக்கி முகம் சிதைந்த நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கண்டெடுத்தனர். பின்னர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதைத் தொடர்ந்து, இறந்தவரின் சட்டை கிழித்து அருகே வீசப்பட்ட நிலையில், பெண் கைக்குட்டை, இருசக்கர வாகன சாவி உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

காவல் துறையினர் மீட்கும் ஆண் சடலம்

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்டது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

கழிவுநீர் கால்வாயில் பெண் சடலம் மீட்பு - போலீஸ் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள வட்டவிளை ராயல் கார்டன் பகுதியில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு உள்ளது. அங்கு மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும். அப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோட்டார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தலையில் கற்களைக் கொண்டு தாக்கி முகம் சிதைந்த நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கண்டெடுத்தனர். பின்னர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதைத் தொடர்ந்து, இறந்தவரின் சட்டை கிழித்து அருகே வீசப்பட்ட நிலையில், பெண் கைக்குட்டை, இருசக்கர வாகன சாவி உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

காவல் துறையினர் மீட்கும் ஆண் சடலம்

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்டது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

கழிவுநீர் கால்வாயில் பெண் சடலம் மீட்பு - போலீஸ் விசாரணை!

Intro:நாகர்கோவில் அருகே வட்டவிளை பகுதியில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு.பரபரப்புBody:tn_knk_02_nagercoil_murder_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வட்டவிளை பகுதியில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு.பரபரப்பு

நாகர்கோவில் அருகே வட்டவிளை ராயல் கார்டன் பகுதியில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு அமைந்துள்ளது.அங்கு தான் மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வழக்கமாக கொட்டப்படும்.அந்த பகுதியில் இன்று இரவு அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக போலிசுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து கோட்டார் போலிஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்க்கும் போது தலையில் கற்களைக் கொண்டு தாக்கி முகம் சிதைந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டது யார்?. எதற்காக கொலை செய்யப்பட்டார் என போலிஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்து கிடந்தவரின் சட்டைபை கிழித்து அருகே வீசப்பட்டிருந்தது. மேலும் பெண் கைக்குட்டை, மொபட் சாவி ஆகியன காணப்பட்டன. போலிஸ் அவற்றை கைப்பற்றி பணத்திற்காக கொலை செய்ய பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காகவா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குப்பை கிடங்கு பகுதியில் திடீரென மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.