ETV Bharat / state

எஸ்.ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கண்டெடுப்பு

author img

By

Published : Jan 24, 2020, 8:00 PM IST

கன்னியாகுமரி: எஸ்.ஐ. வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று திருவனந்தபுரம் தம்பானூர் பேரூந்து நிலையம் அருகே ரத்தக்கறை படிந்த கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SI Wilson case
kanyakumari police murder knife recovered

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைசாவடியில் கடந்த 8ஆம் தேதி இரவில் பணியில் இருந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்பட்டார். அவரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலைசெய்ய பயன்படுத்திய துப்பாக்கியை நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளம் பேரூந்து நிலையம் அருகே உள்ள சாக்கடைக்குள் இருந்து காவல்துறையினர் கைப்பற்றினர்.

இன்று திருவனந்தபுரம் தம்பானூர் பேரூந்து நிலையம் அருகே உள்ள திறந்த புல்வெளி பகுதியில் கத்தியை எறிந்த இடத்தையும் அவர்கள் காட்டியதைத் தொடர்ந்து ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு காவல்துறையினர் ரத்தக்கறை படிந்த கத்தியை கைப்பற்றினர். மேலும் ஒரு கைப்பையில் சில ஆவணங்களும் கிடைத்தன.

அதில் “இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றும் வரை ஓயமாட்டோம், காஜா பாய் என்ற காஜாமொய்தீன் தான் எங்கள் தலைவர்” என எழுதப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ள காஜாமொய்தீனை இவர்கள் குறிப்பிட்டிருக்கலாம் என கருதுகின்றனர்.

முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதால் அடுத்த கட்ட விசாரணையில் இருவருடன் தொடர்பில் உள்ள மேலும் பலர் கைது செய்யப்படவும், ஆயுதங்கள், வெடிபொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கேரளாவில் மீட்பு.!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைசாவடியில் கடந்த 8ஆம் தேதி இரவில் பணியில் இருந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்பட்டார். அவரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலைசெய்ய பயன்படுத்திய துப்பாக்கியை நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளம் பேரூந்து நிலையம் அருகே உள்ள சாக்கடைக்குள் இருந்து காவல்துறையினர் கைப்பற்றினர்.

இன்று திருவனந்தபுரம் தம்பானூர் பேரூந்து நிலையம் அருகே உள்ள திறந்த புல்வெளி பகுதியில் கத்தியை எறிந்த இடத்தையும் அவர்கள் காட்டியதைத் தொடர்ந்து ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு காவல்துறையினர் ரத்தக்கறை படிந்த கத்தியை கைப்பற்றினர். மேலும் ஒரு கைப்பையில் சில ஆவணங்களும் கிடைத்தன.

அதில் “இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றும் வரை ஓயமாட்டோம், காஜா பாய் என்ற காஜாமொய்தீன் தான் எங்கள் தலைவர்” என எழுதப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ள காஜாமொய்தீனை இவர்கள் குறிப்பிட்டிருக்கலாம் என கருதுகின்றனர்.

முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதால் அடுத்த கட்ட விசாரணையில் இருவருடன் தொடர்பில் உள்ள மேலும் பலர் கைது செய்யப்படவும், ஆயுதங்கள், வெடிபொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கேரளாவில் மீட்பு.!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்ட எஸ் எஸ்.ஐ. வில்சனை கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று திருவனந்தபுரம் தம்பானூர் பேரூந்து நிலையம் அருகே ரத்தகறை படிந்த கத்தியும் சிக்கியது. மேலும் குற்றவாளிகள் விட்டு சென்ற கைப்பையில் இருந்த ஆவணத்தில் தீவிரவாத தலைவர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
Body:கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைசாவடியில் கடந்த 8ம் தேதி இரவில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் படுகொலை செய்யப்பட்டார். அவரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளான குமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ஷமீம், தவுபீக் ஆகியோர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளம் பேரூந்து நிலையம் அருகே உள்ள சாக்கடைக்குள் இருவரும் வீசி எறிந்த துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றினர்.

அப்போது பேரூந்து நிலையம் அருகே உள்ள திறந்த புல்வெளி பகுதியில் கத்தியை எறிந்த இடத்தை காட்டியுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் தேடிய போலீஸார் ரத்தக்கறை படிந்த கத்தியை கைப்பற்றினர். மேலும், ஒரு கைப்பையில் இருந்து சிறிய பேப்பர் வடிவிலான சில ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர்.

அதில், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றும் வரை ஓயமாட்டோம். காஜா பாய் என்ற காஜாமொய்தீன் தான் எங்கள் தலைவர் என எழுதப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து போலீஸார் ஏற்கனவே கைது செய்துள்ள காஜாமொய்தீனை இவர்கள் குறிப்பிட்டிருக்கலாம் என கருதுகின்றனர்.

கத்தி, மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதால் அடுத்த கட்ட விசாரணையில் இருவருடன் தொடர்பில் உள்ள மேலும் பலர் கைது செய்யப்படவும், ஆயுதங்கள், வெடிபொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலம் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இருந்தது :-

வில்சனை கொலை செய்வதற்காக 8ம் தேதி மாலையில் நெய்யாற்றின்கரை பள்ளிவாசல் பகுதியில் இருந்த அவர்கள், ஏற்கனவே துப்பாக்கியுடன் இருந்துள்ளனர். அத்துடன் பக்கத்து பகுதியில் உள்ள கடையில் கத்தி வாங்கி வந்துள்ளனர். பின்னர் கைப்பையை அங்கிருந்தவரிடம் கொடுத்துவிட்டு ஆட்டோவில் ஏறி களியக்காவிளை வந்து வில்சனை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து இஞ்சிவிளை வரை நடந்தே சென்று அங்கிருந்து பஸ் ஏறி திருவனந்தபுரம் தம்பானூர் பேரூந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அங்கு பஸ் நிலையம் அருகே கத்தியை வீசி எறிந்து விட்டு துப்பாக்கியுடனே பஸ் ஏறி எர்ணாகுளத்திற்கு சென்றுள்ளனர். எர்ணாகுளத்தில் சுற்றித்திரிந்த அவர்கள் 10ம் தேதி வில்சன் கொலை வழக்கில் தவ்பீக், அப்துல் சமீமின் படத்துடன் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து பத்திரிகைகளில் வந்த செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் அங்கிருந்தால் போலீஸார் கைது செய்து விடுவார்கள் என அஞ்சி எர்ணாகுளம் பஸ் நிலையம் அருகே உள்ள சாக்கடைக்குள் துப்பாக்கியை வீசி எறிந்துவிட்டு, அங்கிருந்தே ரயில் ஏறி மும்பை சென்றுள்ளனர்.

அங்கு இரு நாட்களுக்கு மேல் சுற்றி திரிந்தபோது, வில்சன் கொலை வழக்கில் வடமாநிலங்களிலும் போலீஸார் தீவிர தேடுதல் பணியில் இருப்பதை அறிந்து, அங்கிருந்து பெங்களூருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் தான் அவர்கள் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.