ETV Bharat / state

நாகர்கோவில் காசிக்கு நெருக்கமான நண்பர் கைது!

author img

By

Published : May 7, 2020, 1:10 PM IST

Updated : May 7, 2020, 1:41 PM IST

கன்னியாகுமரி: பெண் மருத்துவரை ஏமாற்றி பணம் பறித்த காசிக்கு உதவிய நண்பரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Kasi friend arrested
Kasi friend arrested

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி (26). இவர் மீது சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், தன்னை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் கோட்டார் காவல் துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, காசியை கைது செய்தனர்.

இதனிடையே காசி மீது நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவரும் புகார் கொடுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி காசியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். நேசமணி நகர் காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்ற விசாரணையில், காசி லேப்டாப்பில் வைத்திருந்த பெண்கள் தொடர்பான பல ஆபாச படங்களை அடையாளம் காட்டியதுடன், தனக்கு உதவியாக இருந்த இரண்டு நண்பர்களின் பெயர்களையும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த இரண்டு நபர்களையும் காவல் துறையினர் தேடிவந்தனர். இதற்கிடையில் நேற்று மாலை காசியின் மீது இரண்டு பெண்கள் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வு புகார் அளித்தனர். இது தொடர்பாகவும் காசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு காசியின் நெருங்கிய நண்பரான டைசன் ஜீனோ (20) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், காசி கொடுக்கும் பெண்களின் ஆபாச புகைப்படங்களை, இணையதளங்களில் அவர் பதிவேற்றியது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கோவையில் சிறார் ஆபாச படங்களை பகிர்ந்தவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி (26). இவர் மீது சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், தன்னை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் கோட்டார் காவல் துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, காசியை கைது செய்தனர்.

இதனிடையே காசி மீது நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவரும் புகார் கொடுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி காசியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். நேசமணி நகர் காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்ற விசாரணையில், காசி லேப்டாப்பில் வைத்திருந்த பெண்கள் தொடர்பான பல ஆபாச படங்களை அடையாளம் காட்டியதுடன், தனக்கு உதவியாக இருந்த இரண்டு நண்பர்களின் பெயர்களையும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த இரண்டு நபர்களையும் காவல் துறையினர் தேடிவந்தனர். இதற்கிடையில் நேற்று மாலை காசியின் மீது இரண்டு பெண்கள் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வு புகார் அளித்தனர். இது தொடர்பாகவும் காசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு காசியின் நெருங்கிய நண்பரான டைசன் ஜீனோ (20) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், காசி கொடுக்கும் பெண்களின் ஆபாச புகைப்படங்களை, இணையதளங்களில் அவர் பதிவேற்றியது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கோவையில் சிறார் ஆபாச படங்களை பகிர்ந்தவர் கைது

Last Updated : May 7, 2020, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.