ETV Bharat / state

திருடப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்!

author img

By

Published : Aug 28, 2019, 3:33 AM IST

கன்னியாகுமரி: திருடுபோன செல்போன் தொடர்பான வழக்கில் சைபர் செல் தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்த 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

kanniyakumar police seized the theft mobile phones

குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள், லேப்டாப் காணாமல் போனது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட காவல்துறை சார்பில் புதிதாக சைபர் செல் என்னும் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.

நாகர்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான இந்த பிரிவு காவல்துறையினர், மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளின் ஆவணங்களை சேகரித்து அதனடிப்படையில் விசாரித்து வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள்

அதில் முதல் கட்டமாக 2018 முதல் 2019ஆம் ஆண்டு வரை பதியப்பட்ட வழக்குகளில் ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஒப்படைத்தார்.

குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள், லேப்டாப் காணாமல் போனது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட காவல்துறை சார்பில் புதிதாக சைபர் செல் என்னும் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.

நாகர்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான இந்த பிரிவு காவல்துறையினர், மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளின் ஆவணங்களை சேகரித்து அதனடிப்படையில் விசாரித்து வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள்

அதில் முதல் கட்டமாக 2018 முதல் 2019ஆம் ஆண்டு வரை பதியப்பட்ட வழக்குகளில் ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஒப்படைத்தார்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் திருடுபோன செல்போன் தொடர்பான வழக்கில் சைபர் செல் தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்த 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 செல்போன்கள் இன்று உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Body:குமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள் தவற விட்டது, லேப்டாப் காணாமல் போனது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது. இதைதொடர்ந்து மாவட்ட காவல் துறை சார்பில் புதிதாக சைபர் செல் எனும் தனி பிரிவு தொடங்கப்பட்டது.
நாகர்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையிலான இந்த தனி பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளின் ஆவணங்களை சேகரித்து அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதன்படி கடந்த 2018 முதல் 2019ம் ஆண்டு வரை பதியப்பட்ட வழக்குகளின் படி முதற்கட்டமாக 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செல்போன்களை உரிய நபர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத் ஒப்படைத்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.