ETV Bharat / state

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் - ஈஸ்டர் கொண்டாட்டம்

கன்னியாகுமரி: ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்
author img

By

Published : Apr 21, 2019, 12:16 PM IST

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாகவும், உயிர்த்தெழுந்த மூன்றாம் நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடி வருகின்றனர்.

கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

இந்நிலையில் இன்று ஈஸ்டர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை வரவேற்கும் விதமாக நேற்று மாலை முதல் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். மேலும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் தின வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாகவும், உயிர்த்தெழுந்த மூன்றாம் நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடி வருகின்றனர்.

கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

இந்நிலையில் இன்று ஈஸ்டர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை வரவேற்கும் விதமாக நேற்று மாலை முதல் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். மேலும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் தின வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர்.

TN_KNK_01_21_ESTER_DAY_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி கன்னியாகுமரி இன்று ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நாளாக அனுசரித்து வருகின்றனர். உலக மக்களுக்காக இயேசு கிறிஸ்து, சிலுவைத் தண்டனையை மனமுவந்து ஏற்று கொண்ட இந்த தினத்தை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கிறார்கள். இதற்காக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவகாலமாக ஏற்று, விரதமிருந்து இயேசு கிறிஸ்துவை ஜெபித்து வருவார்கள். சிலுவையில் அறையப்பட்ட 3ம் நாள் இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழும் நாளே ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.நேற்று மாலை பெரிய வெள்ளியை முன்னிட்டு, கிறிஸ்தவ ஆலயங்களில் பிரார்த்தனை மற்றும் சிலுவை முத்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்றுகோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் ஈஸ்டர் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஆரம்பித்த சிறப்புப் பிரார்த்தனை நள்ளிரவு வரை நடைபெற்றது. நள்ளிரவில் யேசு உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக நடத்தி காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி பிராத்தனையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் ஈஸ்டர் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.